ஐரோப்பா செய்தி

அணில்களை உண்ணும் பிரித்தானியர்கள்: ரஷ்ய தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தி!

  • April 14, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் கடுமையான உணவுத்தட்டுப்பாடு நிலவுவதாகவும், அதனால் பிரித்தானியர்கள் பட்டினி கிடப்பதாகவும், வேறு வழியில்லாமல் அவர்கள் அணில்களை உண்ணுவதாகவும் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியா பணத்தை எல்லாம் உக்ரைனுக்கு உதவுவதற்காக செலவு செய்வதால், பிரித்தானியர்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஆகவே, அவர்கள் வேறு வழியில்லாமல் அணில்களை பிடித்து உண்ணுவதாகவும் ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த அதிரவைக்கும் தகவலை, ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் 60 minutes என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் Olga Skabeyeva என்னும் […]

ஐரோப்பா செய்தி

பக்முட்டின் பெரும் பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த வக்னர் குழுவினர்!

  • April 14, 2023
  • 0 Comments

வாக்னர் குழுமத்தின் கூலிப்படைகள் பக்முட்டின் கிழக்குப் பகுதியின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரேனியப் படைகள் நகரின் மேற்குப் பகுதியை பிடித்து, ஆற்றின் மீதுள்ள முக்கிய பாலங்களை இடித்து தள்ளியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. உக்ரேனியப் பிரிவுகள் மேற்கில் உள்ள பலமான கட்டிடங்களில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்த முடிந்ததால், இந்த பகுதி ஒரு கொலை மண்டலமாக மாறியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிடடுள்ளது. இது வாக்னர் படையினர் மேற்கு நோக்கி தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் […]

ஐரோப்பா செய்தி

மருந்தகம் ஒன்றில் 12 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட இளைஞர்: ஜேர்மன் பொலிஸாரின் அதிரடி

  • April 14, 2023
  • 0 Comments

ஜேர்மன் நகரமொன்றில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றினுள் 12 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட இளைஞர் ஒருவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளார்கள். நேற்று மாலை 4.30 மணியளவில், தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Karlsruhe என்ற நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றினுள் நுழைந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த சுமார் 12 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டுள்ளார். அவர்களை விடுவிக்கவேண்டுமானால் பல மில்லியன் யூரோக்கள் கொடுக்கவேண்டும் என கேட்டுள்ளார் அந்த இளைஞர்.உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார் அந்த இளைஞருடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை […]

ஐரோப்பா செய்தி

சுவிஸில் சிறைக்கைதி ஒருவர் கருணைக்கொலை…!

  • April 14, 2023
  • 0 Comments

சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக கைதி ஒருவர் கருணைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்தில், மருத்துவர்கள் உதவியுடன் சிறைக்கைதி ஒருவர் தன் வாழ்வை முடித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பெல்ஜியம் நாட்டிலுள்ள Nivelles என்னுமிடத்தில் தன் ஐந்து பிள்ளைகளையும் கொலை செய்த Genevieve Lhermitte (56) என்னும் பெண், மருத்துவர்கள் உதவியுடன் கருணைக்கொலை செய்யப்பட அனுமதி வழங்கப்பட்ட விடயம் நினைவிருக்கலாம். தற்போது, சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக Bostadel சிறையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், மருத்துவர்கள் உதவியுடன் வாழ்வை […]

ஐரோப்பா செய்தி

இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிகளின் குழந்தைகளுக்கு கிடைத்த கௌரவம்!

  • April 14, 2023
  • 0 Comments

இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிகளின் குழந்தைகள் இனி இளவரசர், இளவரசி என அழைக்கப்படுவார்கள் என பங்கிங்ஹாம் அரண்மணை அறிவித்துள்ளது. இங்கிலாந்து மன்னர் சார்ல்சின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, இவர் அமெரிக்காவைச் சேர்ந்த, டிவி நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஹாரி-மேகன் தம்பதிக்கு ஆர்ச்சி என்ற 3 வயது மகனும், லிலிபெட் என்ற 1 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் புதிய சட்டம்: கவலைக்கிடமான நிலையில் புலம்பெயர்வாளர்கள்!

  • April 14, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் சட்டம் புலம்பெயரும் திட்டத்தில் இருப்போரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரைக் கட்டுப்படுத்துவதற்கான அதிரடி முயற்சிகளை பிரித்தானிய அரசு துவங்கியுள்ளது.அதன்படி, சட்ட விரோத புலம்பெயர்வோரை கைது செய்தல், நாடுகடத்துதல், மீண்டும் அவர்கள் பிரித்தானியாவுக்கு வர, புகலிடம் மற்றும் குடியுரிமை கோர தடை விதித்தல் ஆகியவற்றை சாத்தியமாக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர பிரித்தானியா தீவிரமாக முயன்றுவருகிறது.   பிரித்தானியா கொண்டுவர இருக்கும் சட்டம் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை உயர்த்த அனுமதி?

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஊழியர்களின்  அதிகாரபூர்வமாக ஓய்வு பெறும் வயதை 62 இருந்து 64 ஆக உயர்த்துவதை ஆதரித்து, செனட்டர்கள் வாக்களித்துள்ளனர். அதற்கு ஆதரவாக 201 பேர் எதிர்ப்புத் தெரிவித்து 115 பேர் வாக்களித்தனர். ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோனின் (Emmanuel Macron) ஓய்வூதியச் சீர்திருத்தத் திட்டங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது. அந்த உத்தேசச் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடெங்கும் போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன. சீர்திருத்த மசோதாவின் ஏனைய அம்சங்களை, ஃபிரான்ஸின் மேலவை சில நாள்களில் அங்கீகரிக்கும் என்று […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் தீவிர தாக்குதலை தொடங்கிய ரஷ்யா – பதற்றத்தில் நாடு

  • April 14, 2023
  • 0 Comments

உக்ரைனில் கடந்த 3 வாரங்களில் இல்லாத தாக்குதல் ஒன்றை ரஷ்யா தொடங்கியுள்ளது. இது தொடர்பாக உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் கவர்னர் ஒலெஹ் சினிஹிபோவ் தலைநகர் கியிவ் மற்றும் கருப்பு கடல் துறைமுக பகுதிகளில் வியாழக்கிழமை இரவு சுமார் 15 முறை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா அதன்  தாக்குதலை நடத்தியதாக கூறினார். மேலும், பெரிய கட்டிடங்கள் மற்றும் ஆற்றல் உற்பத்தி மையங்கள் மீது ரஷ்யா குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் கியிவ் மற்றும் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் வீடொன்றில் சிக்கிய பணம் – அதிர்ச்சியில் பொலிஸார்

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பெருமளவான போதைப்பொருள் மற்றும் 211,000 யூரோக்கள் ரொக்கப்பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலை இவை மீட்கப்பட்டுள்ளது. Nanterre (Hauts-de-Seine) நகரப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை அங்குள்ள கட்டிடம் ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் முற்றுகையிட்டனர். அப்போது நபர் ஒருவர் கையில் ஒரு பையை வைத்திக்கொண்டு குறித்த கட்டிடத்தில் இருந்து வெளியேறுவதைப் பார்த்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவர் சோதனையிடப்பட்டார். அவரது பையில்  211,0000 யூரோக்கள் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் ஆபத்தான நிலையில் பெண்கள்! வெளியான முக்கிய தகவல்

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் இருந்து அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்பட்ட தினத்தில் வைத்து இந்த விடயம் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது பெண்கள் பாதுகாப்பு அற்ற சூழலிலேயே வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும் தெரியவந்திருக்கின்றது. மேலும் சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு ஜெர்மனியில் இருந்து பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அதாவது ஜெர்மனியில் புள்ளி விபர திணைக்களம் அறிவித்த அறிக்கையின் படி 3 நாட்களுக்கு ஒரு நாளில் ஒரு […]

You cannot copy content of this page

Skip to content