பொழுதுபோக்கு

சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து புகைப்படம் வெளியிட்ட சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயனுடன் எஸ்கே21 படத்தில் இணைந்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 3 மாதங்கள் காஷ்மீரில் நடத்தப்பட்டது. படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வரும்நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் கடுமையான குளிர், பனி உள்ளிட்டவற்றிற்கு இடையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது, சென்னை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்றுவரும் நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் சாய் பல்லவி எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பிரேமம் படம் மூலம் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த சாய் பல்லவி தொர்ந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் நடிப்பது மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து நடித்துவரும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜி படமும் சாய் பல்லவி நடிப்பிற்கு சான்றாக அமைந்தது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content