பொழுதுபோக்கு

“சூப்பர்ஸ்டார்” பட்ட சர்ச்சைக்கு ஜெயிலரில் ரஜினி கொடுத்த தரமான பதிலடி

ஜெயிலர் படத்தின் ஹுகூம் பாடலின் வரிகள் சூப்பர்ஸ்டார் பட்டத்தை பறிக்க நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

முதலில் அப்படத்தில் இடம்பெற்ற காவாலா என்கிற பாடலை படக்குழு வெளியிட்டது. தமன்னாவை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட இப்பாடல் வெளியானது முதல் சமூக வலைதளங்களில் செம்ம டிரெண்டிங் ஆக உள்ளது.

காவாலா பாடல் பட்டைய கிளப்பி வரும் நிலையில், அடுத்தபடியாக ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிளாக ஹுகூம் என்கிற பாடலை படக்குழு வெளியிட்டது. நேற்று வெளியிடப்பட்ட இப்பாடல் ரஜினியின் கதாபாத்திரத்தை விவரிக்கும் வகையில் இருந்தாலும், அதனை அவரது சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

குறிப்பாக அப்பாடல் மூலம் தனது சூப்பர்ஸ்டார் பட்டத்தை பறிக்க நினைப்பவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளதாக கூறி வருகின்றனர்.3

அதன்படி ஹுகூம் பாடலில், இடம்பெற்ற “பெயர தூக்க நாலு பேரு… பட்டத்த பறிக்க நூறு பேரு” என்கிற ஒரே வரி தான் தற்போது செம்ம டிரெண்டாகி வருகிறது.

விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என வாரிசு பட ரிலீஸ் சமயத்தில் பலர் தெரிவித்தது பேசு பொருள் ஆனது. இதற்கு எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் சைலண்டாக இருந்து வந்த ரஜினி, தற்போது இந்த பாடல் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த பாடல் வரிகளை ரஜினியின் தீவிர ரசிகனும், சுட்டகதை படத்தின் இயக்குனருமான சூப்பர் சுப்பு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content