பொழுதுபோக்கு

GOAT வெளியாவதில் சிக்கலா? உலகம் முழுவதும் விரைவில் அறிவிப்போம் – அர்ச்சனா

கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் இப்போது விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

செப்டம்பர் ஐந்தாம் தேதி படம் ரிலீஸாகும் சூழலில் ட்ரெயல்ர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சூழலில் இப்போது படம் குறித்த விளக்கத்தை அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருக்கிறார்.

வெங்கட் பிரபுவின் கரியரிலேயே அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50ஆவது படமாக உருவான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

மங்காத்தா வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் என்ற வரிசையில் இடம்பெற்றுவிட்டார். மேலும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான லீடோடு படத்தை முடித்திருந்தார் அவர்.

மங்காத்தா படத்துக்கு பிறகு அவர் இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. அந்த சறுக்கலை மாநாடு படத்தின் மூலம் சரி செய்துகொண்ட அவர் கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். தற்போது விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோரை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார்.

அஜித்துக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இதில் மெகா ஹிட்டை கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். செப்டம்பர் 5ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது.

படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சென்சாரில் யு/ஏ சர்ட்டிஃபிக்கேட் கிடைத்திருக்கிறது. இதற்கிடையே படத்தின் கேடிஎம் டைமிங் குறித்த பல தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ‘கேடிஎம் டைமிங் குறித்து பல யூகங்களை பார்க்க முடிகிறது.

சென்சார் சரியான நடைபெறவும், படத்தை சரியான நேரத்தில் டெலிவரி செய்யவும் நாங்கள் கவனமாக இருக்கிறோம். கேடிஎம் டைம் குறித்து இப்போது எதையும் நாங்கள் எடுக்கவில்லை. உலகம் முழுவதும் ஷோ டைமிங்கை விரைவில் அறிவிப்போம்” என்றார்.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content