அறிவியல் & தொழில்நுட்பம்

டுவிட்டரைப் போல மாறும் பேஸ்புக் – மெட்டா நிறுவனம் அதிரடி அறிவிப்பு

  • May 19, 2023
  • 0 Comments

டுவிட்டரைப் போல ப்ளூடிக் சந்தா சேவையை பேஸ்புக்க்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல சமூக வலைதளங்களான டுவிட்டர் தற்பொழுது உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தக்கூடிய சமூக வலைதளமாக மாறிவிட்டது. இதற்கு முன்னதாக, இந்த டுவிட்டரை உபயோகம் செய்யும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே ப்ளூடிக் கொடுக்கப்பட்டது. ஆனால், டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியவுடன் சந்தா செலுத்தினால் மட்டுமே ப்ளூடிக் வசதி உண்டு என்ற மாற்றத்தை கொண்டு வந்தார். அதிலிருந்து, பயனர்கள் […]

கருத்து & பகுப்பாய்வு

தினசரி பயன்படுத்தும் பல பொருட்களில் ஆபத்தான இரசாயனங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

  • May 19, 2023
  • 0 Comments

தினசரி பயன்படுத்தப்படும் 100க்கும் அதிகமான பொருள்களில் ஆபத்தான இரசாயனங்கள் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சவர்க்காரம், ஷெம்போ எனும் முடியைக் கழுவும் திரவம் முதல் பாத்திரம் கழுவும் திரவம், சலவைக்குப் பயன்படுத்தப்படும் சவர்க்காரம் வரையிலான பொருள்களில் இரசாயனம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Environmental Science & Technology சஞ்சிகையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவின் California பல்கலைக்கழகம், Silent Spring Institute எனும் சுகாதார ஆய்வு அமைப்பு ஆகியவை California மாநிலத்தின் தகவல் தளங்களை ஆராய்ந்தன. குறிப்பாக, காற்றில் எளிதில் […]

அறிந்திருக்க வேண்டியவை

உலகிலேயே அதிக விலை – கின்னஸ் சாதனை படைத்த ஐஸ்கிரீம்

  • May 19, 2023
  • 0 Comments

ஜப்பானிய ஐஸ்கிரீம் ‘பைகுயா’ கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்ற சாதனையை அந்த ஐஸ்கிரீம் படைத்துள்ளது. ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ தயாரித்த ‘பைகுயா’ உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என, கின்னஸ் உலக சாதனை படைத்ததாக அறிவித்தன. இதன்விலை சுமார் 873,400 ஜப்பானிய யென் மதிப்பாகும். இத்தாலியின் அல்பாவில் வளர்க்கப்படும் ஒருவகை அரிய வெள்ளை நிற பாசிகளைக் கொண்டு இந்த பைகுயா ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவது தான் இதன் விலை அதிகமாக […]

ஆசியா

சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வெளியான தகவல்

  • May 19, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து ஏதேனும் புகார் இருப்பின் அறிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. FAST குழு அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவிக்கலாம் என MOM தெரிவித்துள்ளது. அனைத்து விடுதிகளிலும் சோதனை கண்காணிப்பு தொடர்ந்து வழக்கம்போல நடைபெறுவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார். விடுதிகளில் உள்ள சமையலறை சுத்தம் மற்றும் ஒழுங்குமுறை சரியாக உள்ளதா என்பதையும் கண்காணிப்பதாக அவர் கூறினார். வெளி இடங்களில் இருந்து உணவுகளை வாங்கும்போது முறையாக உரிமம் பெற்ற […]

ஐரோப்பா செய்தி

இத்தாலியில் ஆறு மாத மழை ஒன்றரை நாளில் பெய்தது – 13 பேர் உயிரிழப்பு

  • May 19, 2023
  • 0 Comments

இத்தாலியில் ஆறு மாத மழை ஒன்றரை நாளில் பெய்துள்ள நிலையில், 20க்கும் மேற்பட்ட ஆறுகள் கரைபுரண்டு ஓடியதால், 13 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 115 கிமீ (70 மைல்) தொலைவில் உள்ள போலோக்னா மற்றும் வடகிழக்கு கடற்கரைக்கு இடையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வியாழக்கிழமை மேலும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சுமார் 280 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரமான ரவென்னாவின் மேயர், […]

ஐரோப்பா

பிரான்ஸில் அச்சுறுத்தலாக மாறிய சிறுவர்கள் – சுற்றிவளைத்த பொலிஸார்

  • May 19, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். antes-la-Jolie (Yvelines) நகர பொலிஸாரால் குறித்த சிறுவர்கள் கைது செய்துள்ளனர். கடந்த பெப்ரவரி மார்ச் மாதங்களில் Yvelines மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய 12 தொடக்கம் 16 வயதுடைய சிறுவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள சிகரெட் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், தொலைபேசி விற்பனை நிலையங்கள் போன்ற இடங்களில் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 6 கொள்ளைகளில் அவர்களுக்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

இலங்கை பல்வேறு வைரஸ்கள் அச்சுறுத்தும் அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • May 18, 2023
  • 0 Comments

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தடுப்பதற்கு, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை, மக்கள் உரிய வகையில் பின்பற்ற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது. தற்போது, கணிசமான எண்ணிக்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். அத்துடன் இறப்புகளும் பதிவாவதால் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பல வைரஸ் […]

இலங்கை செய்தி

சிங்கப்பூரில் எட்டாவது மாடியில் இருந்து குதித்த இலங்கை பணிப்பெண்

  • May 18, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கை பெண் ஒருவர் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொடுவ – மொட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதான நடிகா தில்ஹானி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் சிங்கப்பூருக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அவர் பணிபுரியும் வீட்டின் உரிமையாளரிடமிருந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து குறித்த பெண் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது. உயிரிழந்த பெண் […]

இலங்கை செய்தி

தனுஷ்க மூன்று குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பு

  • May 18, 2023
  • 0 Comments

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுக்களில் 3 குற்றச்சாட்டுக்கள் நீக்கப்படுவதாக அரசாங்க சட்டத்தரணி டவுனிங் சென்டர் நீதிமன்றில் இன்று (18) அறிவித்தார். தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகளில் ஒன்றை முன்வைத்து எஞ்சிய மூன்று குற்றச்சாட்டுகள் மீளப் பெறப்படும் என இன்று (18) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரசாங்க சட்டத்தரணி நீதவானிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதை […]

இலங்கை செய்தி

தினேஷ் ஷாப்டரின் உடலை தோண்டியெடுப்பதற்கு கோரிக்கை

  • May 18, 2023
  • 0 Comments

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது உடலை தோண்டி எடுக்க வேண்டும் என ஐவர் அடங்கிய விசேட வைத்திய சபை இன்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு உயிரிழந்தவரின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய சபை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, […]

Skip to content