இலங்கை செய்தி

ஈஸ்டர் தாக்குதல் : விசாரணைக்கு வரும் மைத்திரியின் ரிட் மனு!

  • April 11, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டினை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த அறிவிப்பை […]

இலங்கை செய்தி

பொருளாதார நெருக்கடி நிலை : நாட்டை விட்டு வெளியேறிய மில்லியன் கணக்கான மக்க

  • April 11, 2023
  • 0 Comments

கடந்த 2022ம் ஆண்டில் 1.1 மில்லின் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டை விட்டு வெளியேறியவர்களில் 27.6 வீதமானவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமாக 1,127,758 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த ஆண்டு 911757 கடவுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு […]

இலங்கை செய்தி

குற்றச்சாட்டுகள் உள்ளவரை IGPயாக நியமிக்க வேண்டாம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

  • April 11, 2023
  • 0 Comments

அடிப்படை உரிமைகள் மீறல் அல்லது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள எந்தவோர் அதிகாரியையும் அல்லது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ள எந்த அதிகாரியையும் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு (IGP) நியமிக்க வேண்டாம் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவி, மார்ச் 23ஆம் திகதி வெற்றிடமாகவுள்ளதாக வெளியான செய்திக்கு பதிலளிக்கும் வகையில் மேற்குறிப்பிட்ட கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவிதமான […]

இலங்கை செய்தி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி!

  • April 11, 2023
  • 0 Comments

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன்படி  ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை  72.97 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 டொலரால் குறைவடைந்து,  66.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. வங்கித் துறைகளின் வீழ்ச்சி தொடர்பாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து  உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை செய்தி

பொதுமன்னிப்பு என்ற பெயரில் அரசியல் கைதிகளை குற்றவாளியாக முத்திரை குத்தும் அரசு – சக்திவேல் கண்டனம்!

  • April 11, 2023
  • 0 Comments

பொதுமன்னிப்பு என்ற பெயரில் குற்றவாளியாக முத்திரை குத்தி விடுதலை செய்வதை ஏற்க முடியாதென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பயங்கரவாத தடை சட்டத்தினால் 15 வருட வாழ்வை தொலைத்துவிட்ட அரசியல் கைதியான கிளிநொச்சியை சேர்ந்த விவேகானந்தனூர் சதீஷ்குமார் இன்று வெளி உலகையும் குடும்பத்தையும் காணும் வாய்ப்பை பெற்றுள்ளார். சிறையில் வாடும் ஏனைய அரசியல் […]

இலங்கை செய்தி

வெடியரசன் கோட்டையை ஆக்கிரமிக்கும் தொல்பொருள் திணைக்களம் : ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்காக தொல்பொருளியல் திணைக்களத்தின்ர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுத்துநிறுத்துமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். தொல்பொருள் என்ற போர்வையில் வடக்கு, கிழ்க்கில் காலம்காலமாக மக்களால் புனித இடங்களாக போற்றி பாதுகாக்கப்பட்ட இடங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் குறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார். அதில், போருக்குப் பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்றுள்ள ஆக்கிரமிப்புக்கள் […]

இலங்கை செய்தி

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் தவணை அறிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல், 16 ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக, மே மாதம் 13 ஆம் திகதி முதல், மே மாதம் 24 ஆம் திகதிவரை, முதலாம் தவணையின் இரண்டாம்கட்ட விடுமுறை வழங்கப்பட உள்ளது. மூன்றாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஜுலை மாதம் […]

இலங்கை செய்தி

இலங்கையில் 13 வயது சிறுமியுடன் காட்டுக்குள் வாழ்ந்த நபருக்கு நேர்ந்த கதி

  • April 11, 2023
  • 0 Comments

புத்தளம் வீரபுர பிரதேசத்தில் காட்டுக்குள் 13 வயதான சிறுமியுடன் இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான நபரையே தாம் கைது செய்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நபரையும் பாடசாலை மாணவியான 13 வயது சிறுமியையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை சீருடையுடன் சிறுமி, ஆண்ணொருவருடன் காட்டுக்குள் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபர் கிரிபாவ-சோலேவெவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சிறுமி ராஜாங்கனை பிரதேசத்தில் […]

இலங்கை செய்தி

இலங்கையில் லிஸ்டீரியா பரவுகிறதா? சுகாதார பிரிவு முக்கிய தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் லிஸ்டீரியா ( Listeria – Listeriosis)தொற்று பரவும் அபாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இதனால் மக்கள் தேவையற்ற வகையில் அச்சமடைய வேண்டியதில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்டீரியா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அண்மையில்  இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் உயிரிழந்ததையடுத்து, சுகாதார திணைக்களம் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக  இரத்தினபுரி மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஸ்ரீனி அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார். காய்ச்சல், வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி. அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். உடற்கூற்று பரிசோதனை 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நிலையில், போதிய போசாக்கின்மை காரணமாக உயிரிழப்பு இடம்பெற்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகளின் போசாக்கு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இதன் மூலம் உணரப்பட்டுள்ளது.

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி. அன்ரலா விஞ்சன்தயான் […]

You cannot copy content of this page

Skip to content