இலங்கை செய்தி

அடுத்த ஆண்டுக்குள் உணவு பணவீக்கத்தை ஒன்றறை இலட்சத்திற்கு நிலைப்படுத்த திட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் உணவு பணவீக்கத்தை ஒன்றறை இலக்கத்துக்கு நிலைப்படுத்துவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்திட்ட நடவடிக்கைகளை சர்வதேச நிதி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலத்திற்குள் பொருளாதார வளர்ச்சி முன்னெற்றமடையும். சகலருக்கும் நிவாரணம் வழங்கும் […]

இலங்கை செய்தி

திருகோணமலையின் முக்கிய பகுதியை ஆக்கிரமிக்க முயற்சி!

  • April 12, 2023
  • 0 Comments

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 64 ஆம் கட்டை மலையின் இன்னுமொரு பகுதியில் இன்று பௌத்த துறவிகள் விசேட பூஜைகளை செய்துள்ளதாக மூதூர் இந்து மத குருமார் சங்கத் தலைவர் பாஸ்கர சர்மா தெரிவித்துள்ளார். 200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் மலையின் மீது பௌத்த விகாரை அமைக்கப்பட்ட நிலையில்,  அங்கு அம்பாள் வழிபாடுகள் நடைபெற்றதற்கான எச்சங்கள் இனங்காணப்பட்டது. இதனையடுத்து, குறித்த பகுதியை இந்துக்களுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த பகுதியை சுத்தம் […]

செய்தி

தடம்புரண்ட உதயதேவி ;16 பேர் படுகாயம்

  • April 12, 2023
  • 0 Comments

கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி ரயில், கந்தளாய் – அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்தில் உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

2019 இல் நியூசிலாந்து நோக்கி பயணித்த 248 பேருக்கு என்ன நேர்ந்தது : வெளியாகிய புதிய தகவல்!

  • April 12, 2023
  • 0 Comments

2019 இல் நியுசிலாந்திற்கு ஆபத்தான  கடல் பயணத்தை மேற்கொண்ட 248 இலங்கையர்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி குறித்த 248 பேரும் காணாமல்போயிருக்கலாம் என  நியுசிலாந்தின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2019  ஜனவரி 12ம் திகதி ஆட்கள் பயணிக்கும் படகாக மாற்றப்பட்ட 27 மீற்றர் மீன்பிடிப்படகு இந்தியாவிலிருந்து 248 தமிழர்களுடன் புறப்பட்டது. அந்த படகு அவுஸ்திரேலியா அல்லது நியுசிலாந்தை சென்றடைய முயற்சி செய்திருக்கலாம் என நியுசிலாந்து அரச ஆவணங்கள் தெரிவித்துள்ளன.. அதன்பின்னர் அந்த படகிலிருந்தவர்கள் குறித்து […]

இலங்கை செய்தி

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியுடன் இலங்கையில் நங்கூரமிடப்பட்டுள்ள 23 கப்பல்கள்!

  • April 12, 2023
  • 0 Comments

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியுடன் 23 கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியுடன்  குறித்த 23 கப்பல்கள் இலங்கை வந்துள்ளதாக அனல்மின் நிலைய முகாமையாளர் நாலக விஜேகோன் கூறுகிறார். மேலும் தற்போது சுமார் மூன்று இலட்சத்து எண்பதாயிரம் மெற்றிக் தொன் நிலக்கரி கையிருப்பில் இருப்பதாகவும்  அவர் கூறியுள்ளார்.

இலங்கை செய்தி

பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.அத்துடன் சர்வதேச தரங்களுக்கு அமைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதையும் இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல கண்டனங்கள் எழுந்ததை தொடந்து அரசாங்கம் முன்னேற்றகரமான சட்டத்தை கொண்டு […]

இலங்கை செய்தி

லங்கா IOC நிறுவனமும் 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்தியது!

  • April 12, 2023
  • 0 Comments

லங்கா  IOC    நிறுவனம் தனது 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. QR  முறைமையில் இருந்து விலகி எரிபொருள் விநியோகம் செய்யப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஞசு குறியீட்டை மீறி தொடர்ந்து எரிபொருளை விற்பனை செய்து வந்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் நேற்று 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானித்தது.

இலங்கை செய்தி

திருகோணமலையில் மீனவ குழுக்களிடையே மோதல்; களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்!

  • April 12, 2023
  • 0 Comments

திருகோணமலை விஜிதபுர பகுதியில் தமிழ் – சிங்கள   மீனவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  பொலிஸ் அதிரடிப்படையின களமிறக்கப்பட்டுள்ளனர். மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறின்போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மோதல்  நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

செய்தி

பதவிக்காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

  • April 12, 2023
  • 0 Comments

னது பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர் தாய் நாடு திரும்பும், இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin),  ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அவர்களை சந்தித்தார். தான் நாடு திரும்புவதை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன், சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin),  தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அவரின் எதிர்கால பணிகள் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்நிகழ்வில் காலநிலை மாற்றம் தொடர்பான […]

இலங்கை செய்தி

ஐரோப்பா செல்ல முயன்று கடலில் தத்தளித்த 440 புகலிட கோரிக்கையாளர்களில் இலங்கையர்கள்

  • April 12, 2023
  • 0 Comments

மோல்டாவிற்கு அருகே மத்தியதரைக்கடலில் மீட்கப்பட்ட 440 புகலிடக் கோரிக்கையாளர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் சீற்றத்தால்  நிர்க்கதியாகியிருந்த நிலையில் இந்த புகலிட கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டனர். எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் தலையீட்டுடன் இலங்கை, சிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் மீன்பிடி படகில் ஏறி சுமார் நான்கு நாட்களாக புயல் சீற்றம் கொண்ட கடலில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இறுதி […]

You cannot copy content of this page

Skip to content