நிலநடுக்கத்தால் அழிக்கப்பட்ட ஒரு கட்டிடத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஆவணங்களை கடத்த முயற்சி
நிலநடுக்கத்தில் சேதமடைந்த கட்டிடத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஆவணங்களை எடுக்க முயன்ற ஐந்து சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து கட்டிடத்தின் வரைபடங்கள் மற்றும் பிற முக்கிய ஆவணங்களைத் திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டுமானத்தில் இருந்த 33 மாடி கட்டிடம் தரைமட்டமானது. பின்னர் அந்தப் பகுதி பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டு, உள்ளே நுழைவது தடைசெய்யப்பட்டது. சீன குடிமக்கள் அனுமதியின்றி இங்கு நுழைந்தனர். ஆவணங்கள் கடத்தப்படுவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் காவல்துறைக்குத் தகவல் […]