பொழுதுபோக்கு

50 பாதுகாவலர்கள் படைசூழ 200 கிலோ தங்கத்துடன் வந்த ஐஸ்வர்யா ராய்.. சுவாரஷ்ய தகவல்

200 கிலோ தங்கம் அணிந்திருந்த ஐஸ்வர்யா ராயை சுற்றி 50 பாதுகாவலர்கள் எப்போதும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், எந்திரன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் அவர் ஏற்றிருந்த நந்தினி கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கல்கி உருவாக்கியிருந்த கற்பனையான நந்தினி கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய் உயிர் கொடுத்துவிட்டார் என ரசிகர்கள் புகழ்ந்தனர்.

இந்தச் சூழலில் அவர் ஜோதா அக்பர் படத்தில் நடித்தபோது நடந்த சம்பவம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் ராணி கதாபாத்திரம் ஏற்றிருந்தார். அதற்காக அவர் உண்மையான தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த ஆடைகளைத்தான் அணிந்திருந்தாராம்.

See also  மயிரிழையில் உயிர் தப்பிய பிரபல ஹீரோயின் பிரியங்கா மோகன்..!! ஷாக்கிங் வீடியோ

தங்கம் மட்டுமின்றி பிற விலை உயர்ந்த பொருட்களால் ஆன நகைகளையும் அவர் அணிந்திருக்கிறார்.

அந்தப் படம் முழுவதும் கிட்டத்தட்ட 200 கிலோ தங்க நகைகளை ஐஸ்வர்யா ராய் தனது உடலில் அணிந்திருக்கிறார். போலியாக எதுவுமே இருக்கக்கூடாது என்பதற்காக நகைகளை தயாரிக்க படத்தின் இயக்குநர் அஷுதோஷ் கௌவாரிகர் 70 பேரை நியமித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி விலையுயர்ந்த நகைகள், ஆடைகள் ஆகியவைகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஐஸ்வர்யா ராய்க்கென்று 50 பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த பாதுகாவலர்களின் புடைசூழத்தான் ஐஸ்வர்யா ராய் படத்தின் செட்டுக்கு வந்து நடித்துக்கொடுத்திருக்கிறார்.

தற்போது இந்தத் தகவல் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஜோதா அக்பர் படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டானது. ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக கிருத்திக் ரோஷன் நடித்திருந்தார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content