இலங்கை செய்தி

களனி பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடல்

களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடங்கள் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் நாளை காலை 8 மணிக்கு முன்னதாக விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரசபை அறிவித்துள்ளது.

மேலும், டலுகம வளாகம் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான அனைத்து உள்ளக மற்றும் வெளி விடுதிகள் உட்பட பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இடைவேளை அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டு, பிடித்து வைத்து தாக்கப்பட்டார்.

அதன்பிறகு, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரி மாணவர் மையத்தின் நுழைவு வாயிலில் கட்டப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கல்விசாரா ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content