Site icon Tamil News

களனி பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடல்

களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடங்கள் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் நாளை காலை 8 மணிக்கு முன்னதாக விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரசபை அறிவித்துள்ளது.

மேலும், டலுகம வளாகம் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான அனைத்து உள்ளக மற்றும் வெளி விடுதிகள் உட்பட பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இடைவேளை அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டு, பிடித்து வைத்து தாக்கப்பட்டார்.

அதன்பிறகு, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரி மாணவர் மையத்தின் நுழைவு வாயிலில் கட்டப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கல்விசாரா ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

Exit mobile version