இலங்கை

இலங்கையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற படுகொலை சம்பவங்கள்..

நாட்டின் இரு வேறு இடங்களில் இரண்டு கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எம்பிலிபிட்டிய மடுவன்வெல கொலனி பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த 71 வயதுடைய நபர் நேற்று (18) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த குறித்த நபர் தென்னை நார் உற்பத்தி தொழில் செய்து வந்ததாகவும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

338 பேர் கைது
இதேவேளை, நேற்று (18) காலை அரலகங்வில பிம்புரத்தேவ ஏரியின் சடலமொன்று மிதந்துள்ளது.முல்கலயாய 01 பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடந்த 17ஆம் திகதி பிம்புரத்தேவ ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளதுடன், அங்கு மற்றுமொரு நபருடனும் தனது மனைவியுடனும் மதுபானம் அருந்தியுள்ளார்.

இதன் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொலைச் சம்பவம் தொடர்பில் 67 மற்றும் 47 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content