Tamil News

இலங்கையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற படுகொலை சம்பவங்கள்..

நாட்டின் இரு வேறு இடங்களில் இரண்டு கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எம்பிலிபிட்டிய மடுவன்வெல கொலனி பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த 71 வயதுடைய நபர் நேற்று (18) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த குறித்த நபர் தென்னை நார் உற்பத்தி தொழில் செய்து வந்ததாகவும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

338 பேர் கைது
இதேவேளை, நேற்று (18) காலை அரலகங்வில பிம்புரத்தேவ ஏரியின் சடலமொன்று மிதந்துள்ளது.முல்கலயாய 01 பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடந்த 17ஆம் திகதி பிம்புரத்தேவ ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளதுடன், அங்கு மற்றுமொரு நபருடனும் தனது மனைவியுடனும் மதுபானம் அருந்தியுள்ளார்.

இதன் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொலைச் சம்பவம் தொடர்பில் 67 மற்றும் 47 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version