பொழுதுபோக்கு

நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை மிரட்டல்… கார் ஓட்டுநர் உட்பட இருவர் கைது!

நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை ஷெரினா. இவர் ‘வினோதய சித்தம்’ என்ற படத்திலும், பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டு புகழ் பெற்றவர்.

இந்நிலையில் இவரது மேலாளர் கௌரி ஜெகநாதன் கடந்த மாதம் 20 திகதி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகை ஷெரினாவுக்கு தொடச்சியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்து பாலியல் ரீதியாகவும், ஆபாசமாகவும் பேசி வருவதாக தெரிவித்துள்ளார். பின்னர் அந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரித்த போது முன்பு நடிகையிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த கார்த்திக் என்பது தெரியவந்ததாகவும், எனவே நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் தெரிவித்துள்ளார்.

கார்த்திக்

புகாரின் பேரில் அண்ணாசாலை பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை ஷெரினாவின் கார் ஓட்டுநரான திருவள்ளூரை சேர்ந்த கார்த்திக் (24) மற்றும் அவரது கூட்டாளி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா (37) ஆகிய இருவரை மயிலாடுதுறையில் வைத்து பொலிஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இளையராஜா

பின்னர் அவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியதில் நடிகை ஷெரினா கார் ஓட்டுநர் கார்த்திக்கை சில பிரச்சினை காரணமாக வேலையில் இருந்து நீக்கியது, இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது கூட்டாளி இளையராஜா உடன் சேர்ந்து நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. அதுமட்டுமின்றி இருவரும் தொடர்ந்து நடிகைக்கு போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.இதனை அடுத்து பொலிஸார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content