உலகம்

ஹைதியில் கிறிஸ்தவ மத பேரணியில் துப்பாக்கி சூடு; 7 பேர் பலி

ஹைதி நாட்டில் பல கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டு மக்களில் பலர் சுய பாதுகாப்பு குழுக்களில் தங்களை இணைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவற்றில் வா காலே என்ற குழுவானது, பலரது நம்பிக்கையை பெற்றுள்ளது.

ஆனால், உள்நாட்டு மக்களுக்கு எதிராகவும் சில சமயங்களில் இந்த குழு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால், வன்முறை தூண்டி விடப்படுவதுடன், மக்களிடையே அச்சம் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் கனான் என்ற புறநகர் பகுதியில் பாதிரியார் மார்க்கோ என்பவர் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதுபற்றிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளன.

அந்த மத குழுக்களுடன் தொடர்புடைய மஞ்சள் வண்ண சட்டைகளை அணிந்தபடி பலர் பேரணியாக சென்றனர். ஒரு சிலர் தங்களின் கைகளில் கம்புகள், ஆயுதங்கள் போன்றவற்றையும் ஏந்தியபடி சென்றனர். எனினும், திடீரென இயந்திர துப்பாக்கிகளுடன் பேரணிக்குள் புகுந்த கிளர்ச்சி குழுவானது அதிரடியாக அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர். ஆனால், 10 பேர் உயிரிழந்து உள்ளனர் என உள்ளூர் ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

ஹைதியின் தலைநகர் போர்ட்-ஆ-பிரின்சின் வடக்கு புறநகர் பகுதியை இந்த குழுவினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இந்த குழுவின் இயக்குநரான கிதியோன் ஜீன் என்பவர் கூறும்போது, இந்த பலி எண்ணிக்கை உயர கூடும். பலர் காயமடைந்து உள்ளனர். கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்லும் பலர் கடத்தப்பட்டும் உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

(Visited 13 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content