இலங்கை செய்தி

பாணந்துறையில் இளைஞர் கொலையுடன் தொடர்புடைய பாடசாலை மாணவர் கைது

பாணந்துறை பிரதேசத்தில் 23 வயதுடைய இளைஞன் கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபருக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, வெக்கடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில், கொடூரமான வாள்வெட்டுத் தாக்குதலில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

குற்றத்தை நிறைவேற்றுவதற்காக பிரதான சந்தேகநபர் வந்த முச்சக்கரவண்டிக்குள் குறித்த பாடசாலை மாணவன் இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக முதலில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான நபர், காயங்களுடன் ஆடைத் தொழிற்சாலை வளாகத்திற்குள் ஓடியுள்ளார்.

ஆடைத்தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில், வாள்வெட்டுக் கொண்ட குற்றவாளி, தொழிற்சாலை வளாகத்திற்குள் அவரைப் பின்தொடர்ந்து தாக்குதலை நடத்துவதைப் படம்பிடித்துள்ளது. தலையில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு ஆளானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் மொதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறே கொலைக்கான காரணம் என நம்பப்படுகிறது

(Visited 1 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content