பொழுதுபோக்கு

“தலைவரை பார்த்துட்டேன்..” சந்தோஷத்தில் குதித்த ரித்திகா சிங்…

ஜெய்பீம் படம் இயக்கிய ஞானவேல் அடுத்து பிரம்மாண்டமாக ரஜினிகாந்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் தற்போது நடிகை ரித்திகா சிங் இணைந்துள்ள நிலையில், ரஜினிகாந்த் உடன் இணைந்து அவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது குருநாதர் அமிதாப் பச்சன் உடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

மேலும், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திருவனந்தபுரத்தில் படத்தின் பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது. ஆரம்பத்தில் மஞ்சு வாரியர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பின்னர் மும்பையில் அமிதாப் பச்சன் உடனான காட்சிகளும், தற்போது ஹைதராபாத்தில் ராணா டகுபதி உடனான காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் ரித்திகா சிங் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரித்திகா சிங் ரஜினிகாந்தை பார்த்த சந்தோஷத்தில் அவருடன் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இறுதிச்சுற்று, ஓ மை கடவுளே என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ரித்திகா சிங் வேட்டையன் படத்திலும் வெயிட்டு காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content