இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் செல்கின்றார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர் விவசாய காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கவுள்ளார்.

பலாலியில் நடைபெறும் நிகழ்விலேயே காணி கையளிப்பு இடம்பெறவுள்ளது. அத்துடன் பலாலியில் மற்றுமொரு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி, யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச காணிகளில் குடியிருப்பேருக்கு காணி உறுதியை வழங்கி வைக்கவுள்ளார்.

அதேவேளை விவசாயிகளின் நலன்களுக்காக விவசாய திணைக்களத்தால் , உருவாக்கப்பட்ட மென்பொருளின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன் வெள்ளிக்கிழமை மாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவின் கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நான்கு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content