இலங்கை

மட்டக்களப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!

கூரிய ஆயுதமொன்றின் தாக்குதலுக்குட்பட்டு உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் நேற்று (8.12) மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவர் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புணாணையில் வசித்து வந்த எஸ்.டி.அனுர ஜெயலால் வயது (65) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளத்தில் வசித்து வந்தவர் தமது குடும்பத்தின் உறவு துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த பல வருடங்களாக புணானைப் பகுதியில் வசித்து வரும் தனது சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதியன்று கீழிக்குடா மாங்கேணியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணிக்குள் உயிரிழந்தவரும், அவரது சகோதரியும் கண்டியைச் சேர்ந்த பூசாரிகளுடன் தங்கி இருந்து புதையல் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்தனர்.

இதேவேனை கடந்த வியாழக் கிழமை(7) காலை உயிரிழந்தவரின் சகோதரியான எஸ்.டி.சுமித்திரா ஜராங்கனி என்பவர் வெட்டுக் காயங்களுடன் அருகில் இருந்த காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு வாகரை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் சம்பந்தப்ப்பட்ட பூசாரிகள் காணியின் காவலாளர் என்போர் தலைமறைவாகியுள்ளனர். புதையல் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டோர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு தொடர்பாக இவ் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதன்போது காணிக்குள் இருந்த வீட்டின் அருகாமையில் மடு வெட்டியமைக்கான தடயங்கள் மற்றும் புதையல் எடுப்பதற்கான பூசைப் வழிபாட்டு பொருட்கள்  என்பன காணப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையோர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வாகரை பொலிசார் விரைந்து முன்னெடுத்துள்ளனர்.சடலம் உடற் கூற்றாய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content