பொழுதுபோக்கு

விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம் திறந்தார் நாகர்ஜுனா

நாகர்ஜுனா தனது வாழ்க்கையில் நடந்த மிகவும் வேதனையான சம்பவம் குறித்து ஒரு பேட்டியில் முதல் முறையாக மனம் திறந்து பேசினார்.

நாகார்ஜுனா தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தார். நாகார்ஜுனா முதலில் நடிகர் வெங்கடேஷின் சகோதரி டகுபதி லட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் நாக சைதன்யா.

தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அவர்கள் 1984 இல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி 1990-ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். லட்சுமியிடமிருந்து பிரிந்த பிறகு, நாகார்ஜுனா 1991 இல் நடிகை அமலாவை மணந்தார்.

ஆனால் நாகார்ஜுனா தனது வாழ்க்கையில் நடந்த மிகவும் வேதனையான சம்பவம் குறித்து ஒரு பேட்டியில் முதல் முறையாக மனம் திறந்து பேசினார். அப்போது பேசிய அவர் “என் விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யாவை அவர்களின் அம்மாவுடன் அனுப்ப வேண்டியிருந்தது. நான் மிகவும் வேதனையை அனுபவித்த தருணங்கள் அவை.

ஆனால் அந்த நேரத்தில் அவர் அவர்களின் தாயுடன் வளர வேண்டியிருந்தது, எனவே அவரை அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அது கொஞ்சம் சந்தோஷம்தான். சிறுவயதில் நாக சைதன்யா என்னுடன் முழுமையாக இல்லை என்ற வேதனையை இன்றும் உணர்கிறேன்” என்று தெரிவித்தார். நாகார்ஜுனாவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content