பொழுதுபோக்கு

அந்த 4 மணி நேரம் – ராதாரவி பற்றி மிஷ்கின் சொன்ன சீக்ரெட்

இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை.

அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவருகின்றார்.

பேய் படங்கள் என்றாலே திகிலும், படபடப்பும் நிறைந்த காட்சிகள் என்ற டெம்ப்ளேட்டை உடைத்தவர் மிஷ்கின். அவர் இயக்கிய பிசாசு படத்தை பார்க்கும்போது பயம் வருவதற்கு பதிலாக அந்த பேய் மீது இரக்கமும், காதலும் வரும். அந்த அளவுக்கு படத்தை செதுக்கியிருப்பார். அடுத்ததாக அவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் மிஷ்கின் அளித்த பேட்டி ஒன்றில் பிசாசு பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அந்தப் பேட்டியில் பேசிய அவர்,

‘பிசாசு படத்தில் தந்தை கேரக்டரில் ராதாரவியை நடிக்க வைக்க முடிவு செய்தபோது நல்ல தந்தையாக அவர் நடிப்பாரா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். ஏன் நடிக்கக்கூடாதா என்று நான் கேட்டு நடிக்க வைத்தேன். அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட சில நாட்கள் அவருக்கு டயலாக்கே இல்லை. தப்பான இடத்துக்கு வந்துவிட்டோமோ என்றுதான் யோசித்தார். ஆனால் போகப்போக புரிந்துகொண்டார். அதேபோல் ஒரு சீனுக்காக சுமார் நான்கு மணி நேரம் ஐஸில் படுத்துக்கிடந்தார்’ என்றார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content