இலங்கை

மட்டக்களப்பு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை : விசேட கூட்டங்களுக்கு ஏற்பாடு!

மயிலத்தமடு,  மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் மாவட்ட அரசாங்க அதிபரினால் விசேட கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிக்காந்த் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்தின் விவசாய ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (23.09) பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கவேண்டும் என  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கூட்டத்தினை நடாத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

விவசாய நடவடிக்கைகளுக்கான கூட்டங்கள் நடைபெறுகின்றபோதிலும் விவசாய செய்கை காலப்பகுதியில் தமது கால்நடைகளை கொண்டுசெல்வதற்கு ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதி அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமது கால்நடைகளை அப்பகுதிக்கு கொண்டுசெல்லமுடியாது எனவும் எனவே எமது மேய்ச்சல் தரை காணிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அத்துமீறிய குடியேற்றங்களை அப்புறப்படுத்தவேண்டும் எனவும் கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிக்காந்த், குறித்த காணிகள் மகாவலிக்குரிய காணிகள் என்ற காரணத்தினால் உரியவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்திருப்பதாகவும் கூறினார்.

எனினும் தாங்கள் கடந்த 09தினங்களுக்கு மேலாக போராடிவரும் நிலையிலும் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் காணி அபகரிப்பாளர்கள் தமது செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் அதனை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென  பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இது தொடர்பில் விசேட கூட்டத்தினை நடத்தி உரிய அதிகாரிகளை கொண்டு தீர்மானங்களை எடுக்க முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதுடன், விவசாய கூட்டத்தை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையத் தொடர்ந்து விவசாய கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. எனினும் தமக்கான மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வரையில் தாங்கள் மாடுகளை மேய்ச்சல் தரைக்கு கொண்டுசெல்வதில்லையென இங்கு பண்ணையாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content