பொழுதுபோக்கு

என் சட்டை நனையும் அளவிற்கு அழுதார் டி.ஆர்.. கமல் சொன்ற ஸ்டோரி

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த மாதம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் நடிகர் சிம்புவும் கலந்து கொண்டனர். சிம்புவை மேடைக்கு அழைத்தபோது ரசிகர்கள் கொடுத்த ஆரவாரம் தமிழ் சினிமா வட்டாரத்தையே பரபரப்பாக்கியது.

இந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில் நடிகர் சிம்பு குறித்தும் அவரது அப்பா குறித்தும், உலக நாயகன் கமல்ஹாசன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

அதாவது, ” வெளியில் சிம்பு கண்கலங்கியது குறித்து பேசினீர்கள். எனக்கு எனது முதுகுக்கு பின்னால் பேசும் வார்த்தைகள் மிகவும் மிகையானது என எனக்குத் தெரியும். சிம்புவுக்கு எங்கிருந்து இந்த குணம் வந்தது எனக் கூற நான் கடமைப் பட்டிருக்கின்றேன். அந்த குணம் அவருடைய அப்பாவிடம் இருந்து வந்தது.

எனக்காக கண் கலங்கும் அந்த பழக்கம் அவருடைய அப்பாவிடம் இருந்து வந்தது. ஒருநாள் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடலாம் என சொன்னபோது, சிம்புவிடமே இது தொடர்பாக பேசியிருக்கின்றேன்.

நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடலாம எனக் கூறியதும் டி.ராஜேந்திரன் என்னைத் தேடி வந்துவிட்டார். என் சட்டை நனையும் அளவிற்கு என் நெஞ்சில் சாய்ந்து அழுதுவிட்டார்.

நான் என்ன ஆச்சு, எதற்காக இப்படி அழுகின்றீர்கள் எனக் கேட்டேன். அதற்கு, நீங்கள் இப்படிச் சொல்லக்கூடாது. நீங்கள் நடிக்க மாட்டேன் எனச் சொல்லவே கூடாது. எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் எனக் கூறினார். நான் இன்றைக்கு இந்த மேடையில் நின்று பேசிக்கொண்டு இருக்க சிம்புவின் அப்பாவும் ஒரு காரணம். இதனை உங்க அப்பாவிடம் போய்ச் சொல்லுங்க சிம்பு” என கமல்ஹாசன் பேசியுள்ளார்.

சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகின்றார். அந்த படத்தினை மணிரத்னம் இயக்குகின்றார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் மிகவும் மும்மரமாக போய்க்கொண்டு உள்ளது.

ஏற்கனவே இந்த படத்திற்கான இரண்டு கட்ட படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டுக்குள்ளோ அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கோ இந்த படம் வெளியாக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகின்றது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content