பொழுதுபோக்கு

மனைவியுடன் போராட்டம்… மொத்தமாக சென்னைக்கு கும்புடு போட்ட ஜெயம் ரவி

ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து சண்டைதான் தற்போது கோலிவூட்டில் அதிகம் பேசப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்தி ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவர் ஜெயம் ரவியின் புகைப்படங்களை டெலிட் செய்ததாக சில தகவல்கள் வெளியானது.

அந்த நிலையில் தான் இந்த தம்பதி அதிவிரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் பரவியது.

இந்த நேரத்தில் தான் ஜெயம் ரவி ஆர்த்தியுடனான திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து தனித்து வாழ இருப்பதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

தன்னுடைய அனைத்து விஷயத்திலும், குறிப்பாக திரைப்பட விஷயத்தில் ஆர்த்தியின் குடும்பத்தாரின் தலையீடு அதிகம் இருந்ததாலேயே இந்த முடிவை தான் எடுத்ததாகவும் ஜெயம் ரவி கூறினார்.

ஜெயம் ரவியின் ஜீனி, காதலிக்க நேரமில்லை மற்றும் பிரதர் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், இனி அதிக அளவில் பாலிவுட் படங்களில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்காக சென்னையில் இருக்கும் தனது அலுவலகம் மற்றும் பிற விஷயங்களை இப்போது மும்பைக்கு அவர் மாற்றம் செய்து வருவதாகவும். இதற்காகத்தான் அவர் இப்போது மும்பை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், ஜெயம் ரவி மும்பை சென்றடைந்து அங்கு செய்தியாளர்களிடம் பல விஷயங்களை ஹிந்தியில் பேசும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

பாலிவுட் உலகில் உள்ள தயாரிப்பாளர்களுடம் தான் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகவும், தற்போது தனது அலுவலகத்தை மும்பைக்கு மாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content