Tamil News

மனைவியுடன் போராட்டம்… மொத்தமாக சென்னைக்கு கும்புடு போட்ட ஜெயம் ரவி

ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து சண்டைதான் தற்போது கோலிவூட்டில் அதிகம் பேசப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்தி ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவர் ஜெயம் ரவியின் புகைப்படங்களை டெலிட் செய்ததாக சில தகவல்கள் வெளியானது.

அந்த நிலையில் தான் இந்த தம்பதி அதிவிரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் பரவியது.

இந்த நேரத்தில் தான் ஜெயம் ரவி ஆர்த்தியுடனான திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து தனித்து வாழ இருப்பதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

தன்னுடைய அனைத்து விஷயத்திலும், குறிப்பாக திரைப்பட விஷயத்தில் ஆர்த்தியின் குடும்பத்தாரின் தலையீடு அதிகம் இருந்ததாலேயே இந்த முடிவை தான் எடுத்ததாகவும் ஜெயம் ரவி கூறினார்.

ஜெயம் ரவியின் ஜீனி, காதலிக்க நேரமில்லை மற்றும் பிரதர் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், இனி அதிக அளவில் பாலிவுட் படங்களில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்காக சென்னையில் இருக்கும் தனது அலுவலகம் மற்றும் பிற விஷயங்களை இப்போது மும்பைக்கு அவர் மாற்றம் செய்து வருவதாகவும். இதற்காகத்தான் அவர் இப்போது மும்பை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், ஜெயம் ரவி மும்பை சென்றடைந்து அங்கு செய்தியாளர்களிடம் பல விஷயங்களை ஹிந்தியில் பேசும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

பாலிவுட் உலகில் உள்ள தயாரிப்பாளர்களுடம் தான் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகவும், தற்போது தனது அலுவலகத்தை மும்பைக்கு மாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version