பொழுதுபோக்கு

GOAT படத்தை பார்த்த விஜய் என்ன சொன்னாரு தெரியுமா?

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் யாரும் வாங்காத அளவுக்கு சம்பளம் வாங்ககூடிய நடிகர் என்றால் அது நடிகர் விஜய்தான். இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 200 கோடியில் இருந்து ரூபாய் 250 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார் என பல்வேறு முன்னணி திரைப் பிரபலங்கள் கூறிவருகின்றனர்.

இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து தனது 69வது படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

தி கோட் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் விஜய் சில காலம் ஓய்வு எடுத்துவிட்டு, தனது 69 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த படத்தின் இயக்குநராக ஹெச். வினோத் இருப்பார் என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அந்த படத்தில் அரசியல் கதைக்களமாக இருக்கவேண்டும் என ஹெச். வினோத்திடம் கூறி அதற்காகவே இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கிசுகிசுக்கப்படுகின்றது.

இந்நிலையில் நடிகர் விஜய் தி கோட் படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டார் எனவும், படம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது என வெங்கட் பிரபு மற்றும் அவரது உதவி இயக்குநர்களை விஜய் பாராட்டியதாக மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் முதல் பாதியைத் பார்த்த விஜய் இரண்டாம் பாதியும் சிறப்பாக இருக்கவேண்டும் எனவும் கூறியதாகவும் கூறுகின்றனர். இதனால் தி கோட் படம் விஜய்க்கே பிடித்துப் போனதால் அவரது ரசிகர்களுக்கும் கட்டாயம் பிடிக்கும் என கூறப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல் படம் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் விஜய் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கவனமாக இருப்பதாக கூறுகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content