இலங்கை

தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் பெண்ணின சடலம் மீட்பு: பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரண்

முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த வர்த்தகரான பிரதான சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பியகமவிற்கு அருகில் உள்ள கொட்டுன்னா ஓயாவில் இருந்து தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வர்த்தகரான குறித்த சந்தேக நபர் தனது சட்டத்தரணிகள் ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார்.

கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் நபரொருவரும் இன்று (ஒக்டோபர் 02) பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பிரதான சந்தேக நபர் சியம்பலாபே பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர் எனவும் அவருக்கு உதவியவர் அப்பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பாதிரியார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் உடலின் பாகங்களை பிரிப்பதற்கு பிரதான சந்தேகநபருக்கு பாதிரியார் உதவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

(Visited 11 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content