Site icon Tamil News

தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் பெண்ணின சடலம் மீட்பு: பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரண்

முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த வர்த்தகரான பிரதான சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பியகமவிற்கு அருகில் உள்ள கொட்டுன்னா ஓயாவில் இருந்து தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வர்த்தகரான குறித்த சந்தேக நபர் தனது சட்டத்தரணிகள் ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார்.

கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் நபரொருவரும் இன்று (ஒக்டோபர் 02) பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பிரதான சந்தேக நபர் சியம்பலாபே பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர் எனவும் அவருக்கு உதவியவர் அப்பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பாதிரியார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் உடலின் பாகங்களை பிரிப்பதற்கு பிரதான சந்தேகநபருக்கு பாதிரியார் உதவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version