ஈஸ்டர் தாக்குதல் : விசாரணைக்கு வரும் மைத்திரியின் ரிட் மனு!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டினை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த அறிவிப்பை […]