இலங்கை செய்தி

பெரும் பாதுகாப்புடன் நாளை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள சவேந்திர சில்வா!

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் உள்ள விகாரையில் இடம்பெறும் நிகழ்விற்கு நாளைய தினம் (18) சவேந்திர சில்வா வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் இடம்பெறும் நிகழ்விற்கே முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா வருகைதரவுள்ளார். இவ்வாறு சவேந்திர சில்வா வருகை தரும் நிகழ்விற்கு தென்னிலங்கையில் இருந்து 128 பௌத்த பிக்குகளும் அழைத்து வரப்படுகின்றனர். மேலும் இந்த நிகழ்வுகள் நாளை காலைமுதல் பிரித் ஓதுதல் மற்றும் விசேட பூசை ஏற்பாடுகள் என […]

இலங்கை செய்தி

இலங்கையில் திறக்கப்படும் முதலாவது ரேஜ் ரூம் – விரக்தியை வெளிப்படுத்த சந்தர்ப்பம்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை திறக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லையில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. பெருகிவரும் பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு மத்தியில், பல இலங்கையர்கள் வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில், நாட்டின் முதலாவது ஆத்திர அறை என்ற ரேஜ் ரூம் பத்தரமுல்லை கொஸ்வத்தையில் திறக்கப்பட்டுள்ளது. ஒரு ஆத்திர அறையின் கருத்து நவீன நாடுகளில் நன்கு அறியப்பட்டதாகும். எனினும், ஆத்திர அறையின் யோசனை இலங்கை சமூகத்திற்கு இன்னும் புதியது. ஆத்திர அறைகள் ஒருவரின் விரக்தியை வெளிப்படுத்த […]

இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – தந்தையை அடித்துக் கொன்ற சிறுவன்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் 16 வயது மகன் தாக்கியதில் படுகாயமடைந்த அவரது 46 வயது தந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை – வேவதென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்த நபர் மதுபோதையில் வந்து தனது மனைவியை இரும்புக் கம்பியால் தாக்குவதற்கு முற்பட்டபோது அவரின் மகனும் மகளும் தலையிட்டுத் தடுப்பதற்கு முயற்சித்த போது அவர்களையும் தாக்கியுள்ளதால் ஆத்திரமுற்ற மகன் தந்தையிடம் இருந்த இரும்புக் கம்பியைப் பறித்துத் தாக்கினார் என்று […]

இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு கொடுப்பனவு – 1.1 மில்லியன் விண்ணப்பங்கள் தெரிவு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் நலன்புரி கொடுப்பனவிற்கான 3.4 மில்லியன் விண்ணப்பங்களில் கிடைத்துள்ளது. அதில் இருந்து 1.1 மில்லியன் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வருமை நிலையில் உள்ள மற்றும் சமூர்த்தி கொடுப்பனவை பெறுபவர்களுக்கு நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அரசாங்காம் கடந்த வாரங்களில் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 1.1 மில்லியன் பேருக்கு நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

இலங்கை செய்தி

இலங்கையில் வீடொன்றுக்குள் பெண்கள் செய்த அதிர்ச்சி- சுற்றிவளைத்த பொலிஸார்

  • April 11, 2023
  • 0 Comments

கடுகன்னாவ, கந்தகம பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து தேங்காய் விற்கும் போர்வையில் பாரிய அளவில் போதை வஸ்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதாள உலக கோஷ்டியினர் என சந்தேகிக்கப்படும் மூன்று பெண்கள் உட்பட 5 பேரை கடுகன்னாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் குறித்த வீட்டை சுற்றிவளைத்த போது சந்தேக நபர்களிடம் இருந்து 33 கைத்தொலை பேசிகள், 3 வேன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 9 வாகனங்களுக்கான வருமானம் […]

இலங்கை செய்தி

தென்னிலங்கையில் நடந்த கோர விபத்து!!! 300 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கார்

  • April 11, 2023
  • 0 Comments

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த சியான் குமாரி ரயிலுடன் கார் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அஹங்கம – வல்ஹெங்கொட பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும் 35 வயதுடைய இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அந்த இடத்தில் ரயில்வே கேட் இல்லை, மணி மற்றும் லைட் சமிக்ஞைகள் ஒளிரும் போது கார் கடவைகை்குள் நுழைந்ததுடன் ரயிலில் மோதி சுமார் 300 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. விபத்தில் உயிரிழந்த இருவரும் உறவினர்கள் எனவும், குறித்த பெண் […]

இலங்கை செய்தி

இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய உயிரினங்கள்

  • April 11, 2023
  • 0 Comments

அம்பாறை – அத்தகல காப்புக்காடு மற்றும் குருநாகல் – கல்கிரிய வனப் பகுதியில் இரண்டு புதிய கெக்கோ இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அத்தகல காப்புக்காட்டில் காணப்படும் இனத்திற்கு ஜயவீர என்றும், கல்கிரிய சரணாலயத்தில் காணப்படும் இனத்திற்கு நாணயக்கார என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த இனமானது சூழலியலாளர்களான சாந்தசிறி ஜயவீர மற்றும் ஆனந்த லால் நாணயக்கார ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கெக்கோக்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன மற்றும் அவற்றின் தொகை குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை செய்தி

11 இலட்சம் நலன்புரிக் கொடுப்பனவு விண்ணப்பங்கள் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது

  • April 11, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்படும்  நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக தற்போது நடைபெற்று வரும் தகுதியானவர்களை அடையாளங் காணும் நடவடிக்கையில் இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள  தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட 11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 37 இலட்சம் விண்ணப்பங்களின் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்கான தகுதி சரிபார்த்தல் பணிகள்  […]

இலங்கை செய்தி

பிரதமர் மற்றும் ஆளுனர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு

  • April 11, 2023
  • 0 Comments

340 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலமானது மார்ச் 19ஆந் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதன் காரணமாக, அந்த நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுதல் தொடர்பில், பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கிடையேயும் ஆளுனர்களுக்கிடையேயுமான கலந்துரையாடலொன்று, அலரி மாளிகையில் இடம்பெற்றது. இச்சந்தர்ப்பத்தில் ஆளுனர்களான டிகிரி கொப்பேகடுவ (சப்பிரகமுவ), வசந்த கரன்னாகொட (வடமேல்), எம்.ஜே.எம்.முசம்மில் ( ஊவா ), மகிபால ஹேரத் (வடமத்திய), விலீ கமகே (தெற்கு), லலித் யு.கமகே (மத்திய), அநுராதா யகம்பத் (கிழக்கு), ரொஷான் குணதிலக (மேல்), ஜீவன் தியாகராஜா (வடக்கு) […]

இலங்கை செய்தி

வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை!

  • April 11, 2023
  • 0 Comments

நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காத காரணத்தினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க அரச அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி லியனகே தீர்மானித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) எழுத்து மூலம் திணைக்களத்திற்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரியிடம் அரசாங்க அச்சக அலுவலகம் பல தடவைகள் கோரிக்கை […]

You cannot copy content of this page

Skip to content