இலங்கை செய்தி

ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை!

  • April 11, 2023
  • 0 Comments

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும்  சீனாவுடனான ஈடுபாடுகள் குறித்தும் இலங்கை அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகின்றது என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹவார்ட் பல்கலைகழகத்துடனான மெய்நிகர் உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்தும் என்ற அச்சத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானது இல்லை எங்களிற்கே சொந்தம் துறைமுகத்தின் செயற்பாடுகளிற்கான பொறுப்பை நாங்கள் சீன வர்த்தகர்களிடம் வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கொழும்பு துறைமுக அதிகார சபையினால் அதனை நிர்வகிக்க முடியாததன் […]

இலங்கை செய்தி

வல்லரசு நாடுகளின் போட்டி இலங்கையில் சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்த தடையாக அமையாது – ரணில்

  • April 11, 2023
  • 0 Comments

வல்லரசு நாடுகளின் போட்டி இலங்கையில் சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்த தடையாக அமையாது – ரணில் பெரும் வல்லரசுகளுக்கிடையிலான போட்டிகள் அல்லது முரண்பாடுகள் காரணமாக இலங்கையின் இந்திய சந்தைக்கு அல்லது ஆபிரிக்க சந்தையை திறப்பதற்கு தடையாக இருக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட அகுஸ் உடன்படிக்கை சீனா மற்றும் குவாட் நாடுகளுக்கு இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் கடந்த […]

இலங்கை செய்தி

பலம் வாய்ந்த நாடுகளின் அதிகாரப் போட்டியோ மோதலோ இலங்கைக்கு தடையாக அமையக் கூடாது என ஜனாதிபதி தெரிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

பலம் வாய்ந்த நாடுகளின் அதிகாரப் போட்டியோ மோதலோ, இந்திய சந்தைப் பிரவேசத்திற்கோ அல்லது  ஆபிரிக்க சந்தை வாய்ப்பிற்கூ  இலங்கைக்கு தடையாக அமையக் கூடாது என ஜனாதபதி ரணில்  விக்ரமசிங்க  தெரிவித்தார். அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட Aukus உடன்படிக்கையானது சீனா மற்றும் குவாட்  இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இந்து-பசிபிக் பிராந்தியம் தொடர்பான ஆசியானின்  எதிர்காலப் பார்வைக்கு இலங்கை உடன்படுவதாகவும், இந்து-பசிபிக் பிராந்தியமானது இரண்டு வெவ்வேறு […]

இலங்கை செய்தி

சொற்ப காலத்தில் இலங்கைக்கு வந்த 75 ஆயிரம் சுற்றுலா பயணிகள்!

  • April 11, 2023
  • 0 Comments

மார்ச் மாதத்தின் கடந்த 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 76 ஆயிரத்து 247 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 86 ஆயிரத்து 431 பேர் என குறிப்பிடப்படுகின்றது. அதில், 16 ஆயிரத்து 588 பேர் ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் என்பதுடன், ஏனையவர்கள் இந்தியா, ஜேர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ளதாக […]

இலங்கை செய்தி

இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் தொடர்கின்றன – சர்வதேச இந்து இளைஞர் பேரவை கண்டனம்!

  • April 11, 2023
  • 0 Comments

இனவழிப்புகளை தொடர்ந்து சமய அழிப்புகள் தொடர்வது மிக வேதனை தருகிறது என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி மலையில் சிவ ஆலயம் அழிக்கப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறினார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், குருந்தூர் மலையில் கம்பீரமாக விகாரை ஈரம்காயாது நிற்கிறது. ஆனால் இன்று வெடுக்குநாறி மலை கண்ணீர் வடிக்கிறது. எம் இனத்தின் முதுகெலும்புகள் இல்லா அரசியல் வாதிகளால் இற்றை வரை […]

இலங்கை செய்தி

மஹிந்த வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

டிசெம்பர் மாதத்துக்கு முன்னதாக சகல தேர்தல்களும் நடத்தப்படவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃபின் திட்டத்தினை தடைகள் இன்றி முன்னெடுக்க முயற்சிக்கும் இலங்கை : புதிய குழு நியமனம்!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் எந்த தடைகளும் இன்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இதன்படி தடைகள் காரணமாக சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் இடை நிறுத்தப்படுவதை தவிர்ப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது. இதனை தவிர்ப்பதற்காக விசேட அதிகாரங்களுடன் விசேட பிரிவொன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது. குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்குகள் மற்றும் கட்டமைப்பு வரையறைகளை அடைவதற்காக அரசாங்கம் இந்த விசேட பிரிவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.  

இலங்கை செய்தி

சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஸ்ட இயக்குநர் டெப்புரோஸ் முச்சேனா இலங்கை வருகை!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஸ்ட இயக்குநர் டெப்புரோஸ் முச்சேனா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கொழும்பில் 28 ம் திகதி இடம்பெறவுள்ள அறிக்கை வெளியிடும் நிகழ்வில் டெப்புரோஸ் முச்சேனா கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமை நிலவரத்தை கருத்தில் கொள்ளும்போது நாட்டின் 22 மில்லியன் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் ஊக்குவிக்கவேண்டியதன் அவசியத்தை அவர் தனது உரையிலும் இலங்கையில் பிரசன்னமாகியிருப்பதன் மூலமும் வலியுறுத்தவுள்ளார். சர்வதேச மன்னிப்புச்சபையின் பிராந்திய மனித உரிமைகள் தாக்கத்திற்கான மூத்த இயக்குநராக […]

இலங்கை செய்தி

முதல் தடவையாக இலங்கையை வந்தடைந்த உலகின் புதிய பயணிகள் விமானம்!

  • April 11, 2023
  • 0 Comments

உலகின் புதிய பயணிகள் விமானம் ஒன்று  இன்று (27) காலை முதல் தடவையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான இந்த போயிங் 787-10 ரக விமானமே இவ்வாறு  கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளது. அமெரிக்க போயிங் விமான உற்பத்தியாளரின் ட்ரீம்லைனர் விமானப் பிரிவின் கீழ் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் ஒரே நேரத்தில் 337 பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ரோல்ஸ் ரொய்ஸ் இன்ஜின்கள் மூலம் இயக்கப்படும் இந்த விமானம் 36 […]

இலங்கை செய்தி

பிரித்தானிய வாழ் இலங்கை தமிழ் பிரஜையை அதிரடியாக கைது செய்த இந்திய கடலோர காவல்படை!

  • April 11, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் அகதி நிலை கோரிய இலங்கை தமிழர் ஒருவர் இந்திய கடலோர காவல்படையினரால் தமிழக கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 39 வயதான  தமிழரே  இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. கைதான தமிழ் பிரஜை இலங்கையை விட்டு அகதியாக வெளியேறி இலங்கைக்கு திரும்ப முடியாது என்ற நிபந்தனையுடன் நிரந்தர விசா பெற்று […]

You cannot copy content of this page

Skip to content