இலங்கை செய்தி

பதுளையில் வாகன கண்காட்சியில் விபத்து – இரு மாணவர்கள் பலி!

  • April 12, 2023
  • 0 Comments

பதுளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (01) ​​இடம்பெற்ற வாகன கண்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை கிரிக்கட் போட்டியின்  போது, ​​இடம்பெற்ற வாகன கண்காட்சியில் ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த 7 மாணவர்களில் இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இலங்கை செய்தி

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை!

  • April 12, 2023
  • 0 Comments

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னர் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டமூலம் இயற்றபட்டதில் இருந்தே பல்வேறு கேள்விகளையும், கவலைகளையும் எழுப்பியிருந்தது. குறிப்பாக  ஐக்கிய நாடுகள் சபை,  மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட உள்ளூர் சர்வதேச அமைப்புகள் இரண்டும் இலங்கை அதிகாரிகளை சட்டப்பூர்வ கருந்துளை எனக் கருதி […]

இலங்கை செய்தி

இலங்கையில் அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலை குறைப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. அதற்கமய, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. 220 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 200 ரூபாவாகவும், 340 ரூபாவாக இருந்த பருப்பு கிலோ ஒன்றின் விலை 310 ரூபாவாகவும், 230 ரூபாவாக இருந்தது. மேலும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் விலை தற்போது […]

இலங்கை செய்தி

இலங்கை சந்தையில் குறைவடைந்த மாபிள்களின் விலை!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை சந்தையில், மாபிள்களின் விலை, குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி அதிகரித்ததை அடுத்து, உள்ளுர் சநதையில், அனைத்து மூலப்பொருட்களின் விலைகளும் குறைவடைந்து வருகின்றன. அதேநேரம், மாபிள்களுக்கான கேள்வியும் சந்தையில் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றது. இந்த நிலையில், கட்டாயமாக மாபிள்களின் விலைகளைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர […]

இலங்கை செய்தி

இலங்கை மக்களின் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் 86 சதவீத மக்கள் உணவுக்காகப் பயன்படுத்தும் பொருட்களின் அளவைக் குறைத்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியால், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அண்மையில் பல ஆய்வுகளின் அறிக்கைகளை வெளியிட்டு இந்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின் மேலும் 75 சதவீத மக்களுக்கு உணவு தயாரிக்கும் உணவுப் பொருட்களின் பயன்பாடும் குறைந்துள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. 45 சதவீதம் பேர் உணவு […]

இலங்கை செய்தி

சுறுசுறுப்பாக செயற்படுமாறு இலங்கையர்களிடம் கோரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையர்கள் தொற்றா நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற சுறுசுறுப்பான வாழ்வு மிகவும் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர், சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் இதனை தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் உடல் ரீதியாக சுறுசுறுப்பு மிகுந்த மாதமாக பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் […]

இலங்கை செய்தி

யாழில் 2 பிள்ளைகளின் தநதைக்கு நேர்ந்த துயரம்

  • April 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்., கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் – கரம்பகம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பஸ்தர் ஒருவர் நேற்று பாரிய வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாகக் குடும்பத்தைப் பிரிந்து வாழும் இவர், தனது தோட்டத்தில் குடில் ஒன்றை அமைத்து அங்கு தங்குவதை […]

இலங்கை செய்தி

புலஸ்தினி மகேந்திரனின் DNA அறிக்கையை ஏற்க முடியாது – தந்தை சிரில் காமினி

  • April 12, 2023
  • 0 Comments

கட்டுவாப்பிட்டி தேவாலய குண்டுதாரிகளின் மனைவியான சாரா ஜாஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனின் மரணம் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் மூன்றாவது அறிக்கை அவர்களின் முன்னைய அறிக்கைகளுக்கு முரணானது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 26, 2019 அன்று சாய்ந்தமருதில் உள்ள பாதுகாப்பான வீட்டில் […]

இலங்கை செய்தி

தொல்லியல் துறைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக ராணுவ வீரர்கள் மற்றும் புத்த பிக்கு கைது

  • April 12, 2023
  • 0 Comments

டவிரோதமாக தொல்லியல் துறைக்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று இராணுவத்தினர் உட்பட நால்வர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, கரடியனாறு, மாவடிஓடலில் உள்ள தொல்பொருள் தளம் ஒன்றில் சட்டவிரோதமாக நுழைந்து புதைக்கப்பட்ட புதையலைத் தேடும் போது, இலங்கை இராணுவத்தின் லெப்டினன்ட் கேணல், சார்ஜன்ட் மற்றும் கோப்ரல் ஒருவரும் பௌத்த பிக்கு ஒருவருடன் கைது செய்யப்பட்டனர்.  

இலங்கை செய்தி

கொழும்பில் பற்றி எரிந்த வானகங்கள்

  • April 12, 2023
  • 0 Comments

தெஹிவளை மேம்பாலத்தில் கார் விபத்துக்குள்ளானதில் இரண்டு வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்து இன்று (31) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இதையடுத்து இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. தெஹிவளை  தீயணைப்புப் பிரிவினர் வந்து தீயை அணைத்துள்ளனர்.

You cannot copy content of this page

Skip to content