ஹெல்மெட் அணியாமல் வந்த யூடியூபர் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம்
போரூர் போக்குவரத்து போலீசார் பூந்தமல்லி – மவுண்ட் சாலை போரூர் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களை மடக்கி அபராதம் விதித்து கொண்டிருந்தனர். அப்போது மொபெட்டில் வந்த தாய், மகன் இருவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அவர்களை மடக்கி அபராதம் விதிக்க முயன்றனர். அப்போது மொபெட்டை ஓரம் கட்ட சொல்லும்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலரின் கால் மீது மொபெட்டின் முன்பக்க டயர் ஏறியதில் போக்குவரத்து போலீஸ்காரரின் […]