செய்தி தமிழ்நாடு

இறந்த காவலர் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

  • May 4, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். மீமிசல் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், நேற்றைய தினம் திருமயம் அருகே உள்ள கல்லூரில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பணியில் இருந்த பொழுது மாடு முட்டியதில் நவநீதகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்நிலையில் நவநீதகிருஷ்ணனின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரண நிதி வழங்கி அவரை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும், என கூறி உறவினர்கள் […]

இலங்கை செய்தி

நான்கு வருடங்களின் பின் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை!

  • May 4, 2023
  • 0 Comments

ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை நான்கு வருடங்களின் பின்னர் நேற்று  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது. ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குறித்த ஆளும் சபையில், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை தவிர ஏனைய அனைவரும் கலந்துக்கொண்டனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினூடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை வினைத்திறனுள்ளதாக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு விசேட வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.  

செய்தி தமிழ்நாடு

18 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கடை

  • May 4, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையும், 6 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடை ஆகியவற்றின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் திருப்போரூர் எம் எல் ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் […]

செய்தி தமிழ்நாடு

கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

  • May 4, 2023
  • 0 Comments

மணமேல்குடி,தாலுகா நாட்டாணி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ நந்தனவிநாயகர், ஸ்ரீ பூரண புஷ்கல அம்பிகை சமேதஸ்ரீ சதுர முடைய அய்யனார் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அந்த கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 02ம் தேதி செவ்வாய்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3நாட்களாக 4கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித […]

வட அமெரிக்கா

McDonald’s நிறுவனத்தில் பணிபுரிந்த குழந்தைகள்; விதிக்கப்பட்ட அபராதம்

  • May 4, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாநிலத்தில் உள்ள McDonald’s நிறுவனத்தில் சட்டவிரோதமாக குழந்தைகளை வேலைக்கு வைத்துள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 300 குழந்தைகள் சட்டவிரோதமாக McDonald’s நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக மூன்று McDonald’s உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 10 வயது சிறுவர்கள குறைந்த சம்பளத்தில் வேலை செய்ததாகவும், மேலும் லூயிஸ்வில்லே பாயர் புட் எல்எல்சி நிறுவனமானது, 10 மெக்டொனால்டு உணவகங்களை நடத்துகிறது. அங்கு 24 […]

ஐரோப்பா

24 காமிகேஸ் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய ரஷ்யா!

  • May 4, 2023
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கருங்கடல் துறைமுகமான ஒடேசாவை குறிவைத்து, மொஸ்கோ ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது. இதன்படி 24 காமிகேஸ் ஆளில்லா விமானங்களில் 18ஐ வீழ்த்தியதாக உக்ரேனிய வான் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கருங்கடல் கடற்கரை நகரமான ஒடேசா மீது வீசப்பட்ட 15 ஷாஹெட் காமிகேஸ் ட்ரோன்களில் 12 விமானங்களை அழித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. கியேவை குறிவைத்து ஏவப்பட்ட ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக நகர நிர்வாகம் கூறியது. அதேநேரம்  ஷாஹெட் அலைந்து திரியும் வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியும், கீயெவை […]

ஆசியா

படுக்கைக்கு அடியில் கிடந்த சடலம்… ஹோட்டல் அறையில் சுற்றுலா பயணியை நடுங்கவைத்த சம்பவம் !

  • May 4, 2023
  • 0 Comments

சீன நாட்டவர் ஒருவர் திபெத்தில் சுற்றுலா சென்ற நிலையில், அவர் தங்கியிருந்த ஹொட்டல் அறையில் துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்துள்ளார்.சுற்றுலா பயணியின் புகாரை அடுத்து அந்த ஹொட்டல் நிர்வாகம் முன்னெடுத்த சோதனையில், படுக்கையின் அடியில் சடலம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது கொலை வழக்கு விசாரணையை தூண்டியுள்ளது. ஏப்ரல் 21ம் திகதி லாசாவில் உள்ள ஹொட்டல் ஒன்றிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 20ம் திகதி தமது நண்பர்களுடன் லாசா பகுதிக்கு சுற்றுலா சென்ற அந்த […]

செய்தி தமிழ்நாடு

மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம்

  • May 4, 2023
  • 0 Comments

கோவையில் நேற்று முன் தினம் பெய்த கோடை மழையால் போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குறிச்சி பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே புகுந்த மழை நீரில் வெள்ளை நாகம் ஒன்று அடித்து வரப்பட்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பாம்பு பிடி தன்னார்வ அமைப்பிற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள் மழை நீரில் இருந்த 3.5 அடி நீளமுள்ள வெள்ளை நாகத்தை பத்திரமாக மீட்டனர். பிறகு கோவை […]

மத்திய கிழக்கு

எகிப்தில் லொரியின் பின்னால் மோதிய பஸ் – 14 பேர் பலி

  • May 4, 2023
  • 0 Comments

எகிப்து நாட்டின் எல் வாடி எல் ஹிடிட் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு தலைநகர் கெய்ரோ நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இரவு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் முன்னே மெதுவாக சென்ற லொரி மீது பஸ் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை […]

இலங்கை

கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இம்மாதத்தில் அறிவிக்க திட்டம்!

  • May 4, 2023
  • 0 Comments

நாட்டின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான திட்ட வரைவு இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். முன்னதாக ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அறிவிப்பது மற்றும் கடன் வழங்குநர்களுடன் பேச்சுக்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இருப்பினும் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை முதலீட்டாளர்களுக்கு வெளியிடுவதை மே மாத நடுப்பகுதிக்கு பின்தள்ளியுள்ளது இலங்கை அரசாங்கம்.

You cannot copy content of this page

Skip to content