ரயில் மோதி கல்லூரி மாணவி பலி
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் B.optom மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் மாணவி கிருத்திகா (20). இவர் சென்னை, தாம்பரம் அருகே புதிய பெருங்களத்தூரை சேர்ந்தவர்.இவர் வழக்கம் போல் கல்லூரி முடிந்த நிலையில் மாலை வீடு திரும்ப பொத்தேரி ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது சென்னை, எழுப்பூரில் இருந்து தாம்பரம் வழியாக காரைக்குடி செல்லும் விரைவு ரயில் கல்லூரி மாணவி கிருத்திகா மீது மோதியதில் மாணவி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]