செய்தி தமிழ்நாடு

ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது

  • May 17, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராயவரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ராயவரத்தை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊர் பொதுமக்கள் சேர்ந்து தேரின் வடம் பிடித்து இழுத்தனர், பொதுமக்களால் இழுக்கப்பட்ட தேரானது கோவிலை சுற்றியுள்ள குளம் கடைவீதி உள்ளிட்ட முக்கிய தெருக்களில் தேர் வீதி உலா வந்தது. திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு முத்துமாரி அம்மனின் அருள் பெற்று சென்றனர். இந்த தேர்த்திருவிழாவிற்கு காவல்துறையினர் பாதுகாப்பினை […]

செய்தி தமிழ்நாடு

செவிலியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

  • May 17, 2023
  • 0 Comments

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடபட்டது. அன்னை அறவணைப்பு கல்வி அறக்கட்டளை மற்றும் சோலை ஷிப்பிங்க் நிருவணம் சார்பில் அன்னை அறவணைப்பு கல்வி தொண்டு அறக்கட்டளை நிறுவனர் தேவி மணி தலமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதன் நிர்வாகிகள் மற்றும் தலைமை மருத்துவர்கள் கலந்து கொண்டு செவிலியர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அனைத்து செவிலியர்களும் சிறந்த முறையில் பணியாற்றுவது என […]

இலங்கை

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

  • May 17, 2023
  • 0 Comments

இலங்கையர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று வெப்பச் சுட்டெண் கணிசமான மட்டத்தில் அதிகரிக்கக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பதாலும், நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் சோர்வு ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவிக்கின்றது. நீரிழப்பு மற்றும் உமிழ்நீர் இழப்பு காரணமாக, தசைப்பிடிப்பு போன்ற நிலைமைகளும் ஏற்படலாம், அதற்கேற்ப, போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், நிழலான இடங்களில் இருக்குமாறும் அந்தத் திணைக்களம் மக்களை […]

பொழுதுபோக்கு

“ரஷ்மிகாவை விட நான் தான் அதற்கு பொறுத்தமாக இருப்பேன்” ஐஸ்வர்யா தடாலடி

  • May 17, 2023
  • 0 Comments

நடிகை ரஷ்மிகா மந்தனாவை விட புஷ்பா படத்தில் நடிப்பதற்கு நான் தான் பொருத்தமாக இருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இளம் நடிகையாக இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை பக்குவமான கலைஞராக மாற்றியிருக்கிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த சமீபத்திய பேட்டியில், “தெலுங்கு திரையுலகம் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும். கம்பேக் கொடுப்பதற்கு எனக்கு ஒரு நல்ல […]

செய்தி தமிழ்நாடு

கறிக்கடைக்குள் புகுந்து சரமாரியாக வெட்டு

  • May 17, 2023
  • 0 Comments

குன்றத்தூர், மேத்தா நகரை சேர்ந்தவர் பத்மகுரு(42), குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் கோழிக்கறி கடை நடத்தி வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடையில் இருந்தபோது கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் பத்மகுருவை சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த காயமடைந்த பத்மகுரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த வழக்கு சம்பந்தமாக நான்கு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை […]

அறிந்திருக்க வேண்டியவை

மாற்றுச் சர்க்கரையால் ஆபத்து – உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை

  • May 17, 2023
  • 0 Comments

உணவில் மாற்றுச் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது நீண்டகால அடிப்படையில் நீரிழிவு நோய், இருதய நோய் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கலாம். மரணமடையும் சாத்தியமும் அதிகரிக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மாற்றுச் சர்க்கரையைப் பயன்படுத்துவது உடல் கொழுப்பைக் குறைக்க உதவாமலும் போகலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வு, 283 வெவ்வேறு ஆய்வுகளை ஆராய்ந்த பிறகு முடிவுகளை வெளியிட்டது. முடிவுகளின் அடிப்படையில் உலகச் சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டிகளை வரைந்துள்ளது. உடல் எடையைக் குறைக்கவோ, நோய்களிலிருந்து […]

செய்தி தமிழ்நாடு

மெத்தனால் சப்ளை செய்த ஐந்து பேர் கைது

  • May 17, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மரக்காணத்தில் விச சாராயம் குடித்து ஏழு பேர் உயிரிழந்த விவகாரத்தில் மெத்தனால் கலந்த விச சாராயத்தை குடித்ததால் இறந்து போனது தெரியவந்தது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் இளைய நம்பி(45), என்பவர் மெத்தனால் சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார் நிறுவனத்தின் உரிமையாளர் இளையநம்பி அங்கு பணிபுரிந்த சதீஸ்(27), மணிமாறன்(27), கதிர்(27), உத்தமன்(31), ஆகிய ஐந்து பேரை செங்கல்பட்டு […]

இலங்கை

இலங்கையில் கடுமையாகும் சட்டம் – ஜனாதிபதி விசேட பணிப்புரை

  • May 17, 2023
  • 0 Comments

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஒரு சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவாக தடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டக் கட்டமைப்பு ஒன்றின் அவசியத்தையும்வலியுறுத்தியுள்ளார். களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், களுத்துறை தனியார் […]

பொழுதுபோக்கு

பிச்சையெடுக்கும் யோகிபாபு! காரணம் தெரிந்தால் சிரிப்பீர்கள்

  • May 17, 2023
  • 0 Comments

விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Google நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு – நீக்கப்படும் கணக்குகள்

  • May 17, 2023
  • 0 Comments

பயன்பாட்டில் இல்லாத Google கணக்குகளை நீக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Alphabet Inc நிறுவனத்தின் கூகிள் இதனை கூறியுள்ளது. இந்த நடைமுறை டிசம்பர் மாதம் தொடங்கும். அதற்கமைய 2 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத கணக்குகள் நீக்கப்படும் என்று கூறப்பட்டது. அதில் Gmail, Docs, Drive, Meet, Calendar, YouTube, Google Photos ஆகிய சேவைகளும் அடங்கும். தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்படும் Googleகணக்குகளுக்கு மட்டும் நடைமுறை பொருந்தும். பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக Google கூறியுள்ளது. பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை வைத்திருப்போரைத் தொடர்புகொள்ளவிருப்பதாக […]

You cannot copy content of this page

Skip to content