இலங்கை

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ஜெய்சங்கர்!

  • August 27, 2023
  • 0 Comments

13ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரப் பகிர்வை கொண்டுவர  மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்க உறுப்பினர்களுக்கும், நாட்டில் உள்ள அரசியில் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் காணொலி மூலம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா செயல்படுவதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான வளமான எதிர்காலத்திற்காக […]

இலங்கை

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை!

  • August 27, 2023
  • 0 Comments

தெரிவு செய்யப்பட்ட 15 லட்சம் பயனாளிகளில் விவரம் சரியாக சரிபார்க்கப்பட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜுலை மாதம் தொடர்பான பணத்தை திங்கட்கிழமை வங்கிகளில் வைப்பிலிட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தகவல்களை விரைவாக சரிபார்த்த பின்னர், மீதமுள்ள பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக கூறியுள்ளார். மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பிலான கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், […]

இலங்கை

மட்டக்களப்பில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி ; 18 வயது காதலன் கைது

  • August 27, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை வெள்ளிக்கிழமை (25) கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 சிறுமியை காதலித்துவந்த 18 வயது இளைஞன் திருமணம் முடிப்பதாக கூறி சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து வாகரை பொலிஸாரால் குறிப்பிட்ட இளைஞனை கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனை சனிக்கிழமை (26) வாழைச்சேனை […]

வட அமெரிக்கா

புளோரிடாவில் இனவெறி தாக்குதல் – மூவர் பலி!

  • August 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வெலி பகுதியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அப்பகுதியின் டாலர் ஜெனரல் என்ற இடத்தில் வெள்ளை இனத்தவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கருப்பினத்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண், இரு ஆண்கள் என கருப்பினத்தவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், பொலிஸார் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய […]

ஐரோப்பா

பிரான்ஸில் சிறுவன் கொலை – விசாரணையில் அதிர்ச்சி தகவல்

  • August 27, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற சம்பவ இடத்துக்கு மருத்துவக்குழுவினர் வந்தடையும் முன்னரே சிறுவன் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்செயின் (Marseille) 14 ஆம் வட்டாரத்தில் இத்துப்பாக்கிச்சூட்டு அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வைத்து ஆயுதாரிகளால் சரமாரியாக சுடப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புபட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி குற்றச்சாட்டில் இருமுறை அவன் […]

இலங்கை

இலங்கையில் இனக்கலவரம் ஏற்படும் அபாயமா? அமைதி காக்கும் புலனாய்வு பிரிவு

  • August 27, 2023
  • 0 Comments

இலங்கையில் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் இனக்கலவரம் தொடர்பிலும் எந்தவொரு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரிடமிருந்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இதனை தெரிவித்தார். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் தொடர்பில் எல்லா சந்தர்ப்பங்களிலும் தௌிவூட்டிக்கொண்டிருக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் குறிப்பிட்டார். அரசியல் தூண்டுதல் காரணமாக நாட்டில் இனக்கலவரங்களையும் மோதல்களையும் ஏற்படுத்த சிலர் முயற்சிகளை மேற்கொள்வது புலனாவதாகவும் அவர் தெரிவித்தார். அவ்வாறான குழுக்கள் தொடர்பாக […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மர்ம நபர்

  • August 27, 2023
  • 0 Comments

கிழக்கு ஜெர்மனியில் வெளிநாட்டு அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் நகரமான மக்டபேர்க்வெலியினுடைய வெளிநாட்டு அலுவலகத்தின் மீது நேற்று முன்தினம் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதாவது இந்த வெளிநாட்டு அலுவலகத்துடைய கண்ணாடி ஜன்னலானது ஒரு நபரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்டதாக சந்கேிக்கப்படுகின்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரியவந்து இருக்கின்றது. இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து குறித்த பிரதேசத்துடைய நகர முதல்வர் தான் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் […]

இலங்கை

இலங்கை கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

  • August 27, 2023
  • 0 Comments

இலங்கையில் அடுத்த வருடத்திற்கு தேவையான பெரும்பாலான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அச்சிடப்பட்ட புத்தகங்களில் பெரும்பாலானவை அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ள. தனியார் துறைக்கான புத்தகங்கள் அடுத்த வாரமளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அனைத்து சீருடை துணிகளையும் சீனாவிடம் கோரியுள்ளதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் […]

உலகம்

மியான்மாரில் விமானத்தில் பிறந்த குழந்தை – சக பயணிகளின் உதவியுடன் நடந்த பிரசவம்

  • August 27, 2023
  • 0 Comments

மியான்மார் நாட்டில் வான்வெளியில் பயணிகள் விமானத்தில் குழந்தை ஒன்று பிறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளது. கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டதில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. மியான்மர் நாட்டின் தச்சிலிக் நகரிலிருந்து எங்கோனுக்கு உள்ளூர் தனியார் விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. அதில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்து கொண்டிருந்தார். அவருக்கு திடீரென்று பிரசவவலி ஏற்படவே விமான பணி பெண்கள் செய்வதறியாது திகைத்தனர். இருப்பினும் சகபயணிகள் உதவியுடன் அவர்கள் பிரசவம் பார்த்து அழகிய பெண்குழந்தையை ஈன்றெடுத்தனர். சுமார் […]