உலகம்

மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் முன்னிலை?

  • September 10, 2023
  • 0 Comments

மாலத்தீவில் ஜனாதிபதித் தேர்தல்கள் இரண்டு முன்னணி வேட்பாளர்களும் சனிக்கிழமையன்று 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறத் தவறியதை அடுத்து, இரண்டாம் சுற்றுக்கு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ் தனது பிரதான போட்டியாளரான மொஹமட் முயிஸை விட பின்தங்கியிருப்பதாக ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன, முன்னாள் ஜனாதிபதிக்கு 46% வாக்குகள் கிடைத்துள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டிருந்தது. மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 2-வது சுற்று தேர்தல் உறுதி […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்ய புதிய குழு நியமனம்!

  • September 10, 2023
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி குறித்து விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் மூளையாக செயல்பட்டதாக முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இரண்டு விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இறுதித் தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர் ஈஸ்டர் […]

பொழுதுபோக்கு

இனி ஆதி குணசேகரன் இவர்தான்? வெளியான அறிவிப்பு

  • September 10, 2023
  • 0 Comments

சன் டிவியில் முன்னணி தொடராக ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக மாஸ் காட்டி வந்தார் நடிகர் மாரிமுத்து. அவர் உயிரிழந்த நிலையில் அடுத்த குணசேகரன் குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேரக்டரில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எதிர்நீச்சல் சீரியல் குறித்து பேசிய நடிகர் வேல ராமமூர்த்தி: நடிகர் மாரிமுத்து நடிகர், உதவி இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், சீரியல் […]

ஐரோப்பா

சீனாவிற்காக உளவு பார்த்த பிரிட்டன் பாராளுமன்ற ஆராய்ச்சியாளர்..!

  • September 10, 2023
  • 0 Comments

பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் நெருக்கமான தொடர்பு கொண்ட பாராளுமன்ற ஆராய்ச்சியாளர் ஒருவர் சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகியுள்ளார். 30 வயதுக்கு உட்பட்ட அந்த நபர் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகென்டாட் மற்றும் காமன்ஸ் வெளியுறவுக் குழு தலைவர் அலிசியா கியர்ன்ஸ் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்களுடன் தொடர்புடையவர் என தகவல் வெளியாகியுள்ளது.மட்டுமின்றி, அரசாங்க ரகசிய ஆவணங்கள் பல கையாளும் அரசியல்வாதிகள் பலரது நம்பிக்கை பெற்றுள்ள அந்த நபர், அந்த ஆவணங்களை பார்வையிடும் அனுமதியும் பெற்றிருந்தார் […]

பொழுதுபோக்கு

21 வருட திரைப்பயணத்தில் ஜெயம் ரவியை இப்படி பார்த்தது இல்லை…

  • September 10, 2023
  • 0 Comments

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்திலிருந்து, ஜெயம் ரவி கதாப்பாத்திரத்தின் ஃப்ரீபேஸ் லுக் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு பிரத்தியேக […]

மத்திய கிழக்கு

துருக்கியில் கட்டுப்பாடை இழந்து இறுதி ஊர்வலத்துக்குள் புகுந்த லோரி – ஐவர் பலி!

  • September 10, 2023
  • 0 Comments

துருக்கியின் கஹ்ராமன்மாராஸ்-ஆண்டிரின் நெடுஞ்சாலையில் லொரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் இறுதி ஊர்வலமும் நடைபெற்றது. இந்தநிலையில் லொரியின் பிரேக் திடீரென செயலிழந்தது. இதனால் முன்னால் சென்ற கார் மீது மோதிய லொரி பின்னர் இறுதி ஊர்வலம் சென்ற கூட்டத்துக்குள் புகுந்தது. எனவே அதில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 25 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

இலங்கை

தையிட்டி – மண்ணை பாதுகாக்க அணிதிரள அழைப்பு விடுத்துள்ள சட்டத்தரணி கே. சுகாஷ்

  • September 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் பலாலி தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே. சுகாஷ் இதனைத் தடுத்து நிறுத்தி எமது மண்ணைப் பாதுகாக்க அனைவரும் அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். பலாலி தையிட்டி பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற சட்டவிரோத விகாரைக் காணியை ஆக்கிரமிப்பதற்கு நில அளவைத் திணைக்களமும் அரச அதிகாரிகளும் வருகை தர இருப்பதாக நம்பத் தகுந்த தகவல் எங்ளுக்கு கிடைத்திருக்கிறது. இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறுமாக […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு தாக்குதல்

  • September 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. நீர்வேலி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் நீர்வேலியை சேர்ந்த கணேசரத்தினம் வேனுஜா (வயது 24) மற்றும் அவரது தயாரான கணேசரத்தினம் யோகேஸ்வரி (வயது 65) ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் தாயும் மகளும் இருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர், தாய் மற்றும் மகள் மீது வாள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பெண் ஒருவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • September 10, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் சிரியாவிற்கு ஆதரவாக இயங்கிய பெண் ஒருவர் தண்டனைக்குள்ளாகியுள்ளார். குறித்த பெண் ஜெர்மனியில் இருந்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்பிக்கு 2015,2016 ஆம் ஆண்டு சென்றார். அதன் பின்னர் அங்கே பல வன்கொடுமைகளில் ஈடுப்பட்ட பெண் ஒருவருக்கு கடூழியசிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் செலர் என்று சொல்லப்படுகின்ற உயர் நீதிமன்றமானது குறித்த பெண்ணுக்கு 8 வருடம் 6 மாதம் கடூழிய சிறை தண்டனை விதித்து இருக்கின்றது. அதாவது இவ்வாறு ஜெர்மன் நாட்டில் இருந்து சிரியாவிற்கு சென்ற 31 வயதுடைய […]

இலங்கை

திருகோணமலையில் திடீரென தோன்றிய பிள்ளையார் சிலையால் சர்ச்சை

  • September 10, 2023
  • 0 Comments

திருகோணமலை மொறவெவ பகுதியில் இன நல்லுறவினை கெடுக்கும் நோக்குடன் இனம் தெரியாதோரால் பன்குளம் 4ம் கண்டம் பிரதான வீதியின் அருகில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இன்று (10) காலை அப்பகுதி மக்கள் இது பற்றி மொரவெவ- பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்ததை அடுத்து மொறவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த இடத்தில் மரத்திற்கு கீழ் புத்தர் சிலை மற்றும் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் கிராம மக்களினால் குறித்த […]