மேய்ச்சல் தரை காணியை பாதுகாக்குமாறு வலியுறுத்தி விவசாய அமைப்பினர் இணைந்து கவனஈர்ப்பு போராட்டம்
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் விவசாய அமைப்பினர் இணைந்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் ஒன்றியத்தின் அதிகாரசபையின் தலைவர் அ.ரமேஸ் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை காணியை பாதுகாக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை பண்ணையாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். ”பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தில் கைவைக்காதே”, ”மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதி […]