இலங்கை

பம்பலபிட்டியில் ஏற்பட்ட சூறாவளி : வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • September 23, 2023
  • 0 Comments

கொழும்பில் நேற்று (22.09) பிற்பகல் கடும் மழை மற்றும் காற்றுடன் பம்பலப்பிட்டியை அண்மித்த கடற்பகுதியில் சுழற்காற்று போன்ற நிலை ஏற்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காற்று  டயகோபா மேகம் என அழைக்கப்படுவதாக  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடலில் இருந்து நிலத்தை நோக்கி நகர்ந்த இந்த புயலானது பின்னர் எவ்வாறான ஒரு தோற்றத்தை பெறுகிறது என்பதை திணைக்களம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த புயல் நிலைமை காரணமாக பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் கூரைத் தகடுகள் உடைந்தன.

இலங்கை

தோட்ட தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்க நடவடிக்கை!

  • September 23, 2023
  • 0 Comments

தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணி வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை  சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்படி பெருந்தோட்ட கைத்தொழில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சுற்றுலா மற்றும் காணி ஆகிய அமைச்சுகளுடன் இணைந்து அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 250,000 தோட்டத் தொழிலாளர் […]

இலங்கை

வேட்பு மனுக்களை இரத்து செய்ய தீர்மானம் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம்

  • September 23, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், 1000 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில் இவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார். “இதுபோன்ற முடிவுகளை எடுப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்புக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? தற்போது தேர்தல் நடைபெறவில்லை என்றாலும், […]

இந்தியா

உதயநிதியின் தலைக்கு ரூ.25 கோடி! அயோத்தி சாமியார் மீண்டும் சர்ச்சை அறிவிப்பு

  • September 23, 2023
  • 0 Comments

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.25 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா மீண்டும் அறிவித்துள்ளார். தமிழக அமைச்சர் உதயநிதி,”கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க கூடாது. அதன் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும். அதை போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி” என்று கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் […]

ஆசியா

சிங்கப்பூரில் நண்டு உணவுக்கு 680 டொலர் பில்லால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள்!

  • September 23, 2023
  • 0 Comments

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜுன்கோ ஷின்பா தனது நண்பர்கள் மூன்று பேருடன் சிங்கப்பூரில் உள்ள ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றிருந்தார். சப்ளை செய்யும் நபர், இங்கு நண்டு உணவு பிரமாதமாக இருக்கும் என கூறி அதன்விலை 20 டொலர் எனத் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து ஜுன்கோ தனது நண்பர்களுடன் அந்த நண்டு உணவை சாப்பிட்டுள்ளார். அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர், சப்ளை செய்த நபர், பில்லை நீட்டியுள்ளார். அப்போது நண்டு உணவுக்கு 680 டொலர்(இலங்கை மதிப்பில் 2லட்சத்து 20ஆயிரம் ரூபாய்) […]

உலகம்

நேபாளத்தில் போராட்டத்தில் இறங்கிய ஆசிரியர்கள் : மாணவர்கள் பாதிப்பு!

  • September 23, 2023
  • 0 Comments

நேபாளத்தில் பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேபாள பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கல்வி சீர்திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏறக்குறைய 100,000 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொழுதுபோக்கு

அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி…

  • September 23, 2023
  • 0 Comments

விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து இந்த வாரமும் இரண்டாவது இடத்தையே பெற்றுள்ளது. இந்தத் தொடரில் பரபரப்பான காட்சிகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இயக்குநர். இருந்தபோதிலும் முதலிடத்தை பிடிக்க தொடர் தடுமாறி வருகிறது. விஜய் டிவியின் முதலிடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தத் தொடரின் முத்து மற்றும் மீனா கேரக்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பாக்கியலட்சுமி தொடரிலும் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா என லீட் கேரக்டர்கள் மற்றும் […]

இலங்கை

இலங்கையில் வைத்திய துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை : 1000 பேர் இராஜினாமா!

  • September 23, 2023
  • 0 Comments

இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் மருத்துவர்கள் இராஜினாமா செய்துள்ளதாக கோபா குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராய கோபா குழு கூடியபோதே டொக்டர் ஜி.விஜேசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 05 வருட விடுப்பு மற்றும் வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து விலகல், முன்னறிவிப்பின்றி ராஜினாமா செய்தல் மற்றும் குறிப்பிட்ட சேவைக் காலம் முடிந்து ஓய்வு […]

வட அமெரிக்கா

உக்ரைனுக்கு ATACMS நீண்ட தூர ஏவுகணை வழங்க அமெரிக்கா திட்டம்

  • September 23, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய நிகழ்வாக, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் கருங்கடல் கடற்படையின் தலைமையகத்தை உக்ரைனிய ஏவுகணை தாக்கியுள்ளது.இது தொடர்பாக BBC செய்தி நிறுவனத்திடம் உக்ரைனிய அதிகாரிகள் வழங்கிய தகவலில், ஸ்ட்ரோம் ஷடோ ஏவுகணைகளை(Storm Shadow missiles) கொண்டு செவாஸ்டோபோல் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளனர். இந்த ஸ்ட்ரோம் ஷடோ […]

இலங்கை

திலீபன் நினைவேந்தலுக்கு தடைகோரி பொலிஸார் மனு தாக்கல் – தள்ளுபடி செய்த முல்லைத்தீவு நீதிமன்றம்

  • September 23, 2023
  • 0 Comments

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைகோரி மாங்குளம், மல்லாவி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றால் தள்ளுபடி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு கடந்த 15 .09. 2023 அன்று பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனி ஆனது கிழக்கு மாகாணத்தை தாண்டி வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து வருகின்றது இதன்போது அதிகளவான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலமையில் […]