இலங்கை

இலங்கையில் பச்சைக்குத்திக் கொள்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • July 2, 2023
  • 0 Comments

இலங்கையில் பச்சைக்குத்திய நபர்களிடம் இருந்து ஒரு வருட காலத்திற்குள் குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. பச்சைக் குத்துதல் மற்றும், ஊசி ஏற்றல் முதலான செயற்பாடுகள் மூலம், எயிட்ஸ் உள்ளிட்ட 5 நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக தெரியவந்துள்ளது. இதனாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த மத்திய நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். எனவே, பச்சைக் குத்திய காலத்தில் இருந்து, ஒரு வருட […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் நாய்களை கவனிக்க 100000 பவுண்ட் சம்பளம் – நூற்று கணக்கானோர் விண்ணப்பம்

  • July 2, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் ஒரு லட்சம் பவுண்ட் சம்பளத்தில் வேலைவாய்ப்பிற்கு 400 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவில் உள்ள ஒரு பணக்கார குடும்பம் தங்களது வளர்ப்பு பிராணிகளை கவனித்துக்கொள்ள இந்த சம்பளத்துடன் வேலை வாய்ப்பை அறித்துள்ளது. குறித்த பணக்கார குடும்பம், தங்களது செல்லப்பிராணிகளை கவனித்துக்கொள்ளும் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, அவர்களது இரு வளர்ப்பு நாய்களை பராமரிக்க ஒரு லட்சம் பவுண்ட் சம்பளத்துடன் வேலை வழங்கவுள்ளதாக அறிவித்தள்ளனர். விண்ணப்பதாரர்கள் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுப் பொருட்களை கவனித்தால், கால்நடை மருத்துவருடன் […]

ஆசியா

சீனாவில் பரபரப்பை ஏற்படுத்திய வெடிப்பு – வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்

  • July 2, 2023
  • 0 Comments

சீனாவிலுள்ள இரசாயன ஆலை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளனது. இதனால் வானில் அடர்ந்த கரும்புகை வெளியேறியமையினால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. சிலிக்கான் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஆலை Jiangxi மாநிலத்தில் இருக்கிறது. வெடிப்பு நேற்று நண்பகலில் ஏற்பட்டதாகச் சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது. சம்பவ இடத்தைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகின்றன. அதில் ஆலைக்கு அருகே செல்ல வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தும் தீயணைப்புத் துறை வீரர்களின் குரல்கள் […]

இலங்கை

இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வரும் காலப்பகுதியை அறிவித்த ஜனாதிபதி

  • July 2, 2023
  • 0 Comments

செப்டம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையில் இருந்து இலங்கை மீண்டு விடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பணிப்பாளர் சபையுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி “இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் […]

ஐரோப்பா செய்தி

நோயாளிகளுக்கு ஹெபடைடிஸ் பரப்பியதற்காக ஜெர்மன் மருத்துவருக்கு சிறை

  • July 1, 2023
  • 0 Comments

பல நோயாளிகளுக்கு ஹெபடைடிஸ் சி பரப்பியதற்காக ஒரு ஜெர்மன் மயக்க மருந்து நிபுணர் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். தெற்கு ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள ஆக்ஸ்பர்க் பிராந்திய நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியது. அறுவைசிகிச்சைக்காக மயக்கமடைந்த 1,700 நோயாளிகளில் 51 பேர் மருத்துவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான சம்பவம் பிப்ரவரி 2017 மற்றும் ஏப்ரல் 2018 க்கு இடையில் நடந்தது. 61 வயதான மருத்துவர் கொடிய நோயைப் பரப்பியதற்காக தண்டிக்கப்பட்டார். அவர் பணிபுரிந்த டோனாவ்-ரைஸ் […]

செய்தி வட அமெரிக்கா

ஹாலிவுட் நடிகர் ஆலன் அர்கின் காலமானார்

  • July 1, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னணி நடிகரும், ஆஸ்கர் விருது பெற்றவருமான ஆலன் ஆர்கின் (89) காலமானார். அர்கினின் பிள்ளைகள் வெள்ளிக்கிழமை அவரது மரணம் குறித்து தெரிவித்தனர். 2006 ஆம் ஆண்டின் ‘லிட்டில் மிஸ் சன்ஷைன்’ மற்றும் 2013 ஆம் ஆண்டு ‘அரே கோ’ ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றார். ஆர்கின் நியூயார்க்கின் புரூக்ளினில் 1934 இல் பிறந்தார். ஆர்கினின் குடும்பம் 1950 களில் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு குடிபெயர்ந்தது. சிறுவயதிலிருந்தே நடிப்பில் தீவிரமாக இருந்தார். […]

ஐரோப்பா செய்தி

சூட்கேஸுடன் வந்தால், உள்ளே நுழைய முடியாது

  • July 1, 2023
  • 0 Comments

குரோஷியாவின் அட்ரியாடிக் கடற்கரையில் டுப்ரோவ்னிக் ஒரு அழகான நகரம். டுப்ரோவ்னிக் அதன் இயற்கை அழகால் மட்டுமல்ல, அதன் வண்ணமயமான கட்டிடக்கலையாலும் வேறுபடுகிறது. டுப்ரோவ்னிக் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் டுப்ரோவ்னிக் வருகை தருகின்றனர். ஆனால் இப்போது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒரு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சக்கரங்கள் கொண்ட சூட்கேஸ்களை நகரத்தின் வழியாக இழுத்துச் செல்லக்கூடாது. நகரின் கற்கள் நிறைந்த தெருக்களில் சுற்றுலாப் […]

ஐரோப்பா செய்தி

உலகின் மிகவும் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவு

  • July 1, 2023
  • 0 Comments

2023 உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூர், போர்ச்சுகல், ஸ்லோவேனியா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. முன்னதாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கனடா, செக் குடியரசு, பின்லாந்து, குரோஷியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு பட்டியலில் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளன. உலகளவில் ஐரோப்பா மிகவும் அமைதியான பகுதி என்று கூறப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் உலகின் […]

இலங்கை செய்தி

இலங்கையில் சுகாதார துறைக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து

  • July 1, 2023
  • 0 Comments

சுமார் 167 இலங்கை மயக்க மருந்து நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இங்கிலாந்துக்கு வேலைக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வெளிநாட்டில் பயிற்சி முடித்த 160 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு பணிபுரியச் சென்றுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் 323 நிபுணர்கள் பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகள்) டொக்டர் பிரியந்த அத்தபத்து தெரிவித்தார். இவர்களில் 160 பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவர்களை […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் நால்வர் கைது

  • July 1, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் அதனை தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால் தான் பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று […]

You cannot copy content of this page

Skip to content