உலகம்

இஸ்ரேல் போர் : பிரெஞ்சு மக்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்டு வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்னதாக எட்டு பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் பதினெட்டாக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களில் குழந்தைகளும், சிறுவர்கள் உள்ளதாகவும் பிரதமர் Elisabeth Borne இத்தகவலை வெளியிட்டார்.

உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ;முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள கூகுள் CEO சுந்தர் பிச்சை!

  • October 11, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே வெடித்துள்ள மோதலால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூகுள் CEO சுந்தர் பிச்சை வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் கூகுள் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி பல நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது, ப்ராடெக்ட் டெக் முதல் மெஷின் லேர்னிங், செயற்கை நுண்ணறிவு வரையில் மிகப்பெரிய அளவில் அந்த நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் டெக் திறன்களையும், டெக் ஊழியர்களையும் பயன்படுத்திக்கொள்ள […]

ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம்: மக்கள் அச்சம்

சுவிட்சர்லாந்து மக்கள் நிதி நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் அடுத்த ஆண்டில் தங்களிடம் குறைந்த அளவு பணமே இருக்கும் என கருதுகின்றனர். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் இந்த ஆண்டை விடவும் குறைந்த அளவு பணமே தங்களிடம் இருக்கும் என மக்கள் கருதுகின்றனர். சுகாதார காப்பீட்டு கட்டண அதிகரிப்பு, வாடகை தொகை அதிகரிப்பு, அடகு கடன் வட்டி வீத […]

தமிழ்நாடு

‘தண்ணீர் இல்லையேல் உணவு இல்லை’ – நடிகை கஸ்தூரி காட்டம்

  • October 11, 2023
  • 0 Comments

காவிரி பிரச்சனை விவகாரத்தில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு உணவுபொருள்கள் அனுப்பக்கூடாது என நடிகை கஸ்தூரி காட்டமாக பேசியுள்ளார். தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாக, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு கர்நாடகாவை வலியுறுத்தியது.ஆனால், போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், தண்ணீர் திறந்து விட முடியாதென்று கர்நாடகா திட்டவட்டமாக கூறியது. இந்த பிரச்சனை தொடர்பாக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், பிரபலங்களும் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், […]

இலங்கை

பல்கலைக்கழக விடுதிகளில் இரவில் சோதனையிட தீர்மானம் – கலாநிதி சுரேன் ராகவன்

  • October 11, 2023
  • 0 Comments

இரவு நேரங்களில் பல்கலைக்கழக விடுதிகளை பகிடிவதை சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் சோதனையிட தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். விடுதிகளில் பெரும்பாலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் புதிதாக உள்வாங்கப்பட்ட மாணவர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாகவும் அவர்கள் பகிடிவதைக்கு உள்ளாகுவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக ஒழுங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவர் ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று […]

இலங்கை

சம்மாந்துறையில் காட்டுயானைகளினால் அல்லலுறும் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

காட்டுயானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பொறியியலாளர் உதுமான்கண்டு நபீர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவு‌ 08 இல் ஒரே நாளில் யானை தாக்கி 4 இடங்கள் சேதமடைந்துள்ளதோடு இன்று அதிகாலை தனியான் யானை ஒன்றும் வந்து சென்றுள்ளது சம்மாந்துறை 08 கிராம சேவையாளர் பிரிவில் உள் நுழைந்த காட்டு யானை அப் பிரதேசத்தில் பயிர்களை சேதப்படுத்தியதோடு […]

இந்தியா பொழுதுபோக்கு

விமானத்தில் சக பயணியால் பாலியல் துன்புறுத்தல்… பிரபல நடிகை புகார்!

  • October 11, 2023
  • 0 Comments

மலையாள நடிகை திவ்ய பிரபா விமானத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். நடிகை திவ்யா பிரபா கடந்த அக்டோபர் 10ம் திகதி மும்பையில் இருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா ஃபிளைட்டில் பயணித்த போது, சக பயணியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதையும் இதற்காக காவல் துறையில் புகார் அளித்துள்ளது பற்றியும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்துள்ள புகாரில், ‘என் அருகில் குடித்து விட்டு […]

இலங்கை

அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல்!

அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளர் டேவிட் கெரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் சமய நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரின் மத உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் தூதுவர் ஸ்டீபன் ஸ்னெக், தூதுவர் ஜேமி ஸ்டாலி, கண்காணிப்பு கொள்கை ஆலோசகர் செமா ஹசன், கொள்கை ஆய்வாளர் […]

மத்திய கிழக்கு

பதிலடி கொடுக்கும் நோக்கில் லெபனான் மீது தாக்குதல் தொடுத்துள்ள இஸ்ரேல்

  • October 11, 2023
  • 0 Comments

5வது நாளாக தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர், இதர திசைகளிலும் வெடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த வகையில் ஹிஸ்புல்லாவின் புதிய ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து இன்று(11) இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் தொடுத்தன. இந்த வாரத்தின் தொடக்கத்தில் இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அங்கத்தினர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலிய நிலைகள் மீது ஏவுகணைகளை வீசியதாக ஹிஸ்புல்லா அமைப்பு விளக்கமளித்தது. இதனையடுத்து, காஸா மீது தாக்குதல் தொடுத்து வரும் இஸ்ரேலிய […]

பொழுதுபோக்கு மத்திய கிழக்கு

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்… அஜித்தின் விடாமுயற்சிக்கு சிக்கலா?

  • October 11, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – பாலஸ்தீன் போரால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்குக்கு சிக்கல் எழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அஜித். அவரது 62ஆவது படமாக இது உருவாகிறது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்தப் படத்திலிருந்து அவர் விலகிவிட அடுத்ததாக மகிழ் திருமேனி உள்ளே வந்தார். மகிழ் திருமேனியும் அட்டகாசமான இயக்குநர் என்பதால் துணிவு படம் போலவே விடாமுயற்சியும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். பல தடைகளுக்குப்பறகு […]