ஆசியா

சீனாவில் வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்

  • July 18, 2023
  • 0 Comments

சீனாவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். சீனாவின் தென் பகுதியில் சூறாவளியால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. Talim என்றழைக்கப்படும் சூறாவளியினால் நூற்றுக்கணக்கான ரயில், விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. இந்த ஆண்டு சீனாவை உலுக்கியுள்ள 4ஆவது கடும் புயல் இது என அந்நாட்டு வானிலை ஆய்வகம் கூறியிருக்கிறது. குவாங்டோங் (Guangdong) மாநிலத்தில் புயல், மழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 230,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் 8,000 மீன் பண்ணை ஊழியர்களும் […]

ஆசியா

சீனாவில் தலிம் சூறாவளி தாக்கம் : ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து!

  • July 18, 2023
  • 0 Comments

சீனாவில் தலிம் சூறாவளியால் கரையோரபகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் ரயில் மற்றும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் நான்காவது சூறாவளியான தலிம் சூறாவளியால்,  மணிக்கு 136.8 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சூறாவளிக்கு முன்னதாக,  ஆரஞ்சு எச்சரிக்கை  விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  குவாங்டாங்கில் உள்ள கிட்டத்தட்ட 230,000 நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன்  மீன் பண்ணைகளில் இருந்து 8,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இலங்கை

யாழில் 12 வயது சிறுவனுக்கு தாயாரின் கணவர் செய்த கொடூரம்!

  • July 18, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் 12 வயதுச் சிறுவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெருப்பால் சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். மாவட்டம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ஒருவனே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் தாயின் கணவர் நெருப்பால் சுட்டதில் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. கை, முகம் எனப் பல இடங்களிலும் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தீக் காயத்திற்கு இலக்கான சிறுவன் நேற்றைய தினம் பாடசாலைக்குச் சென்றுள்ளார். […]

செய்தி

வவுனியா மோதல் சம்பவம் குறித்து இருவர் கைது!

  • July 18, 2023
  • 0 Comments

வவுனியாவில் அண்மையில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர். வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக குறித்த மோதல் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது. இதில் அவ்வழியே பயணித்த கார் ஒன்றும் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஐந்துபேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் […]

பொழுதுபோக்கு

“சூப்பர்ஸ்டார்” பட்ட சர்ச்சைக்கு ஜெயிலரில் ரஜினி கொடுத்த தரமான பதிலடி

  • July 18, 2023
  • 0 Comments

ஜெயிலர் படத்தின் ஹுகூம் பாடலின் வரிகள் சூப்பர்ஸ்டார் பட்டத்தை பறிக்க நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. முதலில் அப்படத்தில் இடம்பெற்ற காவாலா என்கிற பாடலை படக்குழு வெளியிட்டது. தமன்னாவை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட இப்பாடல் வெளியானது முதல் சமூக வலைதளங்களில் செம்ம […]

இலங்கை

எல்ல பகுதியில் பேருந்து விபத்து – ஒருவர் பலி!

  • July 18, 2023
  • 0 Comments

எல்ல – வெல்லவாய வீதியில் இன்று (18.07) பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். உமா ஓயா திட்ட அலுவலகத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பயணிகள் காயமடைந்து வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக குறித்த பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி

  • July 18, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் படுக்கைகளுக்கான சராசரி மாத வாடகை அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டு ஒரு ஊழியருக்கு 280 சிங்கப்பூர் டொலராக இருந்த வாடகை, தற்போது (2023ஆம் ஆண்டு) ஒரு ஊழியருக்கு 420 சிங்கப்பூர் டொலராக உயர்ந்துள்ளது. 2023 மே மாத நிலவரப்படி, சிங்கப்பூரில் கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் (PCM) சுமார் 434,000 வெளிநாட்டு ஊழியர்கள் […]

ஐரோப்பா

கிரீஸில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ!

  • July 18, 2023
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை அதிகரித்து வருகின்ற நிலையில், கிரீஸில் உள்ள கடலோர நகரங்களில் இரண்டு பெரிய காட்டுத் தீ பரவியுள்ளது. இதன்படி ஏதென்ஸுக்கு அருகிலுள்ள இரண்டு நகரங்களில், காட்டுத்தீயின் காரணமாக வீடுகள் எரிந்து சேதமாககியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேக்க தலைநகர் ஏதென்ஸுக்கு மேற்கே 50 மைல் (80 கிமீ) தொலைவில் அமைந்துள்ள கோடைக்கால முகாமில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்க உள்ளூர் மக்களுடன் இணைந்து தீயணைப்பு வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் விபத்துக்குள்ளான விமானம் – ஐவர் பலி – பலர் காயம்

  • July 18, 2023
  • 0 Comments

போலந்துத் தலைநகர் வார்சாவுக்கு அருகே சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிய விமானத் திடலுக்கு அருகே விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்தின் மீது அது மோதியது. சம்பவத்தின்போது விமானத்தில் 3 பேர் இருந்தனர். புயலிலிருந்து தப்பிக்க சுமார் 13 பேர் அந்த இடத்தில் தஞ்சமடைந்திருந்தனர். சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமுற்றனர். இருவரது நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என வார்சா பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். […]

ஆசியா

பசுபிக் பெருங்கடல் பகுதியில் 158 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

  • July 18, 2023
  • 0 Comments

கடந்த இரு மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், 158 மில்லியன் பெறுமதியுள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. கோகோயின் மற்றும் மரிஜுவானா ஆகிய போதைப் பொருட்களே  பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை தடுத்து நிறுத்திய அமெரிக்க கடலோர காவல்படை நேற்றைய தினம் (17.07) சான் டியாகோவில் 11,600 பவுண்டுகளுக்கும் அதிகமான கோகோயின் மற்றும் 5,500 பவுண்டுகள் பெறுமதியான மரிஜுவானாவை கைப்பற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. […]

You cannot copy content of this page

Skip to content