இந்தியா

சச்சின் மகள் சாராவின் டீப் ஃபேக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

  • November 23, 2023
  • 0 Comments

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து இந்திய நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா, தற்போது டீப்பேக் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.இந்த டீப்பேக் என்பது, உண்மையான நபர்களோடு வேறொருவரின் முக அமைப்பை தொடர்புப்படுத்தி போலியான காணொளி, புகைப்படம் ஆகியவற்றை உருவாக்குவது ஆகும். அண்மையில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப் ஆகியோரின் டீப்பேக் காணொளிகள் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.இதுபோன்று போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ஒரு லட்சம் அபராதம் […]

இலங்கை

கொடிகாமம்- பருத்தித்துறையில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் அகற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடு!

  • November 23, 2023
  • 0 Comments

கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் அறுக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.   இனந்தெரியாத நபர்களால் நேற்று (22.11) இரவு குறித்த கொடிகள் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளரான  செ.மயூரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முன்னாள் உப தவிசாளர் மயூரன் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இரவு 8மணி வரை நினைவேந்தல் இடத்தில் […]

இலங்கை

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது கோபிசங்கருக்கு வழங்கப்பட்டது!

  • November 23, 2023
  • 0 Comments

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வைத்திய கலாநிதி டி.கோபிசங்கருக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவானது, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 21ம் திகதி நடைபெற்றது. இதன்போது “வடக்கு மாகாணத்தில் ஏற்படும் விபத்துக்கள்” பற்றி 2020 ம் ஆண்டு எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைக்காகவே இந்த விருது வழங்கப்பட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தேசிய ஆராய்ச்சி சபையால் வருடாந்தம் இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

மல்லாவியில் நிகழ்ந்த கோர விபத்து விபத்து ஒருவர் பலி! மேலுமொருவர் காயம்

  • November 23, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் இன்று (23) காலை 6.10 மணியளவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற பணியாளர்களை ஏற்றுகின்ற பேருந்து ஒன்று ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றுவதற்காக பின்னால் MAG மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றி வரும் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர் இவர்களை கவனிக்காமல் மாங்குளம் வெள்ளாங்குளம் பிரதான வீதியில் இருந்து அணிஞ்சியன்குளம் 2ம் பகுதி ஸ்ரீ […]

பொழுதுபோக்கு

துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி தொடர்பில் வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

  • November 23, 2023
  • 0 Comments

விக்ரமின் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு திரையுலகில் உள்ளது. ஜனவரி 2017 இன் பிற்பகுதியில் அதன் முதல் ஷூட்டிங் அட்டவணையைத் தொடங்கிய இந்தத் திரைப்படம், தயாரிப்பு சிக்கல்கள் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அதன் வெளியீட்டில் ஆறு ஆண்டுகள் தாமதத்தை எதிர்கொண்டது. தயாரிப்பாளர்கள் தங்கள் ஈடுபாட்டை பாதியில் விலக்கிக் கொண்டதால், இயக்குனர் கவுதம் மேனன் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றார். இப்படத்தில் விக்ரம், ரிது வர்மா, ஆர்.பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன் […]

இலங்கை

இலங்கை பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல மருத்துவரின் விசேட அறிவிப்பு

  • November 23, 2023
  • 0 Comments

இலங்கை வைத்தியர்களின் ஆலோசனையின்றி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதால், உயிர்வாழ்வுக்குத் தேவையான பக்டீரியாக்கள் மரணிக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார. குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மனிதன் 50 ஆண்டுகளுக்குள் மரணிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘உலக எண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம்’ குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நோயெதிர்ப்பு மருந்துகள் பக்டீரியாக்களை வலுவிழக்கச் செய்யும் என்றும், அதிகப்படியான நன்மை பயக்கும் பக்டீரியாக்களும் இதனால் கொல்லப்படுகின்றன என்றும் […]

இலங்கை

இலங்கையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த யுவதிகள் தொடர்பில் வெளியான தகவல்

  • November 23, 2023
  • 0 Comments

பதுளை -ஹாலிஎல – உடுவர 6ஆம் கட்டை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு யுவதிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக ஹாலிஎல உடுவர 6வது மைல்கல் பகுதியில் உள்ள கந்தகொல்ல பத்தனையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்போது அதற்கு அருகில் இருந்த வீடொன்றில் வசித்து வந்த இரண்டு யுவதிகள் மண் சரிவில் சிக்கினர். ஒருவர் கெந்தகொல்லபதன உடுவரை ஹாலிஎல பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண், மற்றவர் […]

பொழுதுபோக்கு

தனக்கு நடந்த பாலியல் சீண்டலை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்

  • November 23, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தன்னுடைய கல்லூரி காலத்தில் நடந்த பாலியல் சீண்டல் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய திரை உலகில் வாரிசு நடிகர் – நடிகைகளாக அறிமுகமாகும் அனைவருமே, முன்னணி இடத்திற்கு வந்து விடுவதில்லை. குறிப்பாக தமிழில் அறிமுகமான பல வாரிசு பிரபலங்கள், வந்த வேகத்தில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். ஒரு சில பிரபலங்கள் மட்டுமே, தொடர்ந்து முன்னணி […]

பொழுதுபோக்கு

சீனு ராமசாமியின் டார்ச்சரை தாங்க முடியாமல் திரையுலகை விட்டே ஓடி போன இளம் நடிகை… ஷாக்கிங் நியூஸ்

  • November 23, 2023
  • 0 Comments

பிரபல இயக்குனர் சீனு ராமசாமி, இளம் நடிகை ஒருவருக்கு கொடுத்த டார்ச்சரால் தான் அவர் திரையுலகை விட்டு சில காலம் ஒதுக்கி இருந்தார் என, பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ள தகவல் திரையுலகத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது. கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று, படத்தை இயக்கி தேசிய விருதை பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. தற்போது இயக்குனர் சீனு ராமசாமி குறித்து, பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி முன்வைத்துள்ள […]

பொழுதுபோக்கு

குவியும் பாலியல் புகார்…, கசப்பான அனுபவங்களை பகிர்ந்த ராதிகா ஆப்தே

  • November 23, 2023
  • 0 Comments

தெலுங்கு திரையுலகில் தனக்கும் பாலியல் சீண்டல் நடந்துள்ளதாக நடிகை ராதிகா ஆப்தே கூறி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள விசித்ரா, தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் ஒன்று பகிர்ந்து கொண்டார். அப்போது 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஒரு படத்தில் நடித்தபோது டாப் ஹீரோ ஒருவர் தன்னை ரூமுக்கு அழைத்ததாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை யாரும் தட்டிக்கேட்கவில்லை என்றும் மனவேதனையுடன் கூறி […]