ஐரோப்பா

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) அடுத்த ஆண்டு விளையாட்டுகளில் நடுநிலையாளர்களாக ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது, பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெறும் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள், உக்ரைன் போரை தீவிரமாக ஆதரிக்காத வரை, அணி நிகழ்வுகளுக்கு வெளியே, கொடிகள், சின்னங்கள் அல்லது கீதங்கள் இல்லாமல் பங்கேற்க முடியும் என்று ஐஓசி தெரிவித்துள்ளது. . உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் ஆரம்பத்தில் சர்வதேச அளவில் போட்டியிட […]

இலங்கை

தல்பேயில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் விசாரணை

ஹபராதுவ, தல்பே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். தங்களை பொலிஸார் என்று அடையாளப்படுத்தி கொண்ட குழுவொன்று குறித்த நபரை மாத்தறையில் இருந்து காலி – தல்பே வரை கடத்தி சென்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பின்னர் குறித்த குழுவினர் அந்த நபர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 30 வயதான நபர் தற்போது கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான மேலதிக […]

இலங்கை

இங்கு பலர் வருகிறார்கள்.. பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் – நல்லை ஆதீன செயலாளர் கலாநிதி ஆறு திருமுருகன்

  • December 9, 2023
  • 0 Comments

நல்லை ஆதீனத்திற்கு பலர் வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள்.பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் ஆனால் எந்த முடிவோ எந்த தீர்வும் எட்டப்படுவதில்லை என உலக தமிழ் பேரவையினரிடம், தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவரும், நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். உலக தமிழ் பேரவையினர், இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய போதே , ஆறுதிருமுருகன் அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நீங்கள் எல்லாருமாக […]

பொழுதுபோக்கு

சலார் முதல் காட்சி தொடர்பில் கேரள திரையரங்குகள் எடுத்த தீர்மானம்

  • December 9, 2023
  • 0 Comments

பொதுவாக பிரபல ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது. மற்ற மாநிலங்களில் இது குறித்து பெரிய கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும் தமிழகத்தில் தொடர்ந்து மாறி மாறி நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கேரளாவில் 5 மணிக்கு திரையிடப்பட்டு வந்த அதிகாலை காட்சிகளை விரைவில் வெளியாக இருக்கும் சலார் படத்திற்காக அதிகாலை 12:30 மணிக்கே திரையிட இருக்கிறார்கள். இதற்காக ரசிகர் மன்றங்கள் இப்போதே டிக்கெட்டுகளை விற்பனை செய்ய துவங்கி விட்டன. […]

ஆசியா

20 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இந்தோனேசியா!

  • December 9, 2023
  • 0 Comments

இந்தோனேசிய சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார அமைச்சகம் இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச நுழைவு விசாக்களை வழங்க முன்மொழிந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் பல மடங்கு உயர்வை கொண்டுவருவதற்காகவும் அந்நாடு இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்தோனேசியா சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா சலாஹுதீன் யூனோ கூறுகையில், “தற்போதுள்ள விசா விலக்கு உள்ள நாடுகளைத் தவிர, அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 20 நாடுகளை அமைச்சகம் முன்மொழிந்துள்ளதாக தெரிவித்தார். 20 நாடுகளுக்கு […]

ஐரோப்பா

பிரான்சில் ஆசிரியையின் தலையை துண்டித்த வழக்கில் ஆறு பிரெஞ்சு இளைஞர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பு

2020 இல் பிரான்சின் பாரிஸ் புற­நகர்ப் பகு­தி­யில் உள்ள ஒரு பள்­ளிக்கு அருகே வர­லாற்று ஆசி­ரி­யர் ஒரு­வர் தலை துண்­டித்­துக் கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஆறு இளைஞர்கள் குற்றவாளிகள் என பிரெஞ்சு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .. நபி­கள் நாயகம் தொடர்­பாக சர்ச்­சைக்­கு­ரிய கேலிச்­சித்­தி­ரங்­களை மாண­வர்­க­ளுக்கு காட்­டி­ய­தால் ஆத்­தி­ர­ம­டைந்த சந்­தேக நபர்கள் ஆசிரி­ய­ரைக் கொன்­றுவிட்ட­தா­கக் கூறப்­ப­டு­கி­­றது. அவரை கொலை செய்த 18 வயது நபர் ரஷ்யாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் செசென்யா பகுதியைச் சேர்ந்தவர் என்று பிரான்ஸ் நாட்டு காவல்துறை […]

உலகம்

இஸ்ரேல் -ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஐ.நாவின் தீர்மானம் ; நிராகரித்த அமெரிக்கா

  • December 9, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது. ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரித்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்த நிலையில் வாக்கெடுப்பில் இங்கிலாந்து பங்கேற்கவில்லை. பாலஸ்தீனம் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்திற்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே போரால் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. 2 மாதமாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக காசாவில் மக்கள் கடும் அவதிக்கு […]

இந்தியா

மின் நிலுவையை வசூலிக்க சென்ற அதிகாரிகளை நாய்களை ஏவி விட்டு கடிக்க செய்த குடும்பம் !

  • December 9, 2023
  • 0 Comments

3.5 லட்ச ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ள தொகையை வசூல் செய்ய சென்ற மின்துறை அதிகாரிகளை ஒரு குடும்பத்தினர் இரும்புக் கம்பியால் தாக்கியதுடன் நாய்களை அவிழ்த்து விட்டு கடிக்க விட்டு துப்பாக்கியைக் காட்டி விரட்டிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம், புலந்த்சாகரில் உள்ள கியான் லோக் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சவுத்ரி. இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் விஷால். இவர்கள் 3.5 லட்ச ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் கட்டாமல் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து […]

இலங்கை

புதுக்குடியிருப்பில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆற்றல் கொண்டு மாற்றம் காண்போம் எனும் தொனிப்பொருளில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு இன்று (09) புதுக்குடியிருப்பில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்குகின்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும்வகையில் குறித்த நிகழ்வு இன்று (09.12.2023) காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ச.சதாகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் புதுக்குடியிருப்பு […]

வட அமெரிக்கா

நெவாடா பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

  • December 9, 2023
  • 0 Comments

லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்த நிலையில், அந்த பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்படி குறித்த பல்கலைக்கழகத்தின் இறுதி தேர்வுகள் அடுத்த வாரம் நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “பல்கலைக்கழக சமூகம் அனுபவித்த உடல் மற்றும் உணர்ச்சிகரமான அதிர்ச்சி மற்றும் வளாக வசதிகளின் தாக்கம் காரணமாக, காலண்டர் ஆண்டின் இறுதியில் ஆசிரியர்களும் ஊழியர்களும் தொலைதூரத்தில் பணிபுரிய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று ஜனாதிபதி […]