உலகம்

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 90 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. கடந்த அக்டோபா் 7-ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அதனையடுத்து அக்டோபர் 13, 15 மற்றும் […]

இலங்கை

இலங்கையில் பதுளை நோக்கி செல்லும் அஞ்சல் ரயில் இரத்து!

  • December 10, 2023
  • 0 Comments

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இரவு நேர அஞ்சல் ரயிலை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. நிலச்சரிவு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பாதையில் ரயில் சேவை தடைபட்டதை அடுத்து ரயில்வே திணைக்களம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்படி கெலிஓயாவுக்கும் கம்பளைக்கும் இடையில் இரண்டு இடங்களிலும் தெமோதர மற்றும் ஹாலியாலக்கு இடையிலும் புகையிரத பாதையில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்து கத்தார் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • December 10, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மீண்டும் போர் நிறுத்தத்தை அறிவிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக கத்தார் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை அறிவிக்கும் மத்தியஸ்தராக கட்டார் செயற்பட்டதையடுத்து 07 நாட்கள் தற்காலிக யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. எனினும், போர் நிறுத்தத்துக்குப் பிறகு, காசா பகுதியில் மீண்டும் கடுமையான மோதல்கள் வெடித்தன. எனினும், போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யும் என கத்தார் தெரிவித்துள்ளது.

இலங்கை

கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவ,மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு

திருகோணமலை -கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவ,மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு (09) பாடசாலை பெற்றோர்களினால் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை பரதநாட்டிய போட்டி தேசியமட்டம் 18.11.2023 அன்று அனுராதபுரம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது . அதில் திருகோணமலை கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயம் – தப்பு நடனம் -கிராமிய குழு நடனத்தில் இரண்டாம் இடத்தினை பெற்று வெற்றி பெற்றுள்ளது . இப்பாடசாலையானது தேசிய மட்டம் வரை சென்றது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த […]

இலங்கை

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று : மட்டக்களப்பிலும் மாபெரும் போராட்டம்!

  • December 10, 2023
  • 0 Comments

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று (10.12)  பிற்பகல் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் மனித உரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியும்  மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடைபெறும் மனித உரிமை மீறல்களை வன்மையாக கண்டிக்கின்றோம் என்னும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் […]

இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட பண்ணையாளர்களுக்கான விசேட அறிவித்தல்…

  • December 10, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்ட பண்ணையாளர்கள் மாடுகளுக்கான பண்ணைகளை பதிவு செய்து உச்ச பயன் பெற்றுக்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் கிருஜகலா சிவானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.இத்ற்கமைய அவர் விடுத்துள்ள கோரிக்கையில் பண்ணையாளர்கள் தமது மாட்டுப் பண்ணைகளை பதிவுசெய்ய வேண்டியதும் தங்களால் வளர்க்கப்படும் சகல மாடுகளுக்கும் காதுப்பட்டி பொருத்துதலும் மிக முக்கியமானதாக அறிவிக்கப்படுகின்றது. இலங்கையிலுள்ள பண்ணைகளில் மாடுகளின் பண்ணைகள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது 2008ம் ஆண்டில் இருந்தே முக்கிய விடயமாக கால்நடை உற்பத்தி […]

இலங்கை

நாவற்சோலை கிராம மக்களின் குடிநீர் பிரச்சினை: கிணறுகள் புனரமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கையளிப்பு

திருகோணமலை -நாவற்சோலை கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக கிணறுகள் புனரமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட வறிய மக்கள் குடியேற்றிய ஓர் கிராமம் ஆகும். இது திருகோணமலை -முல்லைத்தீவு வீதியில், திருகோணமலை நகரில் இருந்து வடபுறமாக 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு 600 குடும்பங்கள் வரையில் வாழ்கின்றன. இங்கு மக்கள் குடியேற்றிய பொழுது தொண்டு நிறுவனங்கள் இரண்டு கிணறுகளை அமைத்துக் கொடுத்தன. அவற்றில் இருந்தே இவ்வூருக்குக் குடிநீர் வழங்கப்படுகின்றது.மேற்படி கிணறுகளில் ஊறும் […]

பொழுதுபோக்கு

என்னது இந்த இடுப்பு, தொடைக்கு எல்லாம் சொந்தக்காரி ரம்பா இல்லையா? அடக்கொடுமையே…

  • December 10, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படத்தில் ரம்பாவுக்கு பதிலாக டூப் போட்டு பாடல் காட்சிகளை படமாக்கியதாக அந்த படத்தின் இயக்குநர் அளித்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. செல்வ பாரதி இயக்கத்தில் நடிகர் விஜய் நினைத்தேன் வந்தாய் மற்றும் பிரியமானவளே என 2 ஃபீல் குட் மூவிக்களில் நடித்துள்ளார். இதில், நினைத்தேன் வந்தாய் படத்தில் இடம்பெற்ற “வண்ண நிலவே” பாடல் இன்று வரை பல விஜய் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாகவே உள்ளது. இந்நிலையில், அந்த பாடலில் […]

ஐரோப்பா

தீவிரமடையும் போர்: புத்தாண்டு கொண்டாட்டங்களை குறைக்கும் ரஷ்யா

ரஷ்யாவில் உள்ள பல பிராந்திய தலைவர்கள் தங்கள் உள்ளூர் புத்தாண்டு கொண்டாட்டங்களை குறைக்க முடிவு செய்துள்ளனர், அதற்கு பதிலாக உக்ரைனில் மாஸ்கோவின் இராணுவ முயற்சிகளை ஆதரிப்பதற்காக நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு, உக்ரைனுடன் நடந்து வரும் மோதலின் வெளிச்சத்தில், ஆடம்பரமான வானவேடிக்கை காட்சிகள் மற்றும் பெரிய பொதுக் கூட்டங்களைத் தவிர்த்து, புத்தாண்டு தினத்தன்று ஏற்கனவே உள்ள நகராட்சி அலங்காரங்களைப் பயன்படுத்தும் போக்கைப் பிரதிபலிக்கிறது என்று நியூஸ் வீக் அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு

சென்னையில் பன்றி திருடியதாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன்: உடலைத்தேடும் மாதவரம் பொலிஸார்!

  • December 10, 2023
  • 0 Comments

சென்னை மணலி அருகே பன்றிகளைத் திருடியதாக 17 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி சின்னமாத்தூர் ஜெயலட்சுமி சாலையைச் சேர்ந்தவர் சங்கர். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு 17 வயதில் சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை மணலி எட்டியப்பன் தெருவில் வசிக்கும் இவர்களது உறவினர்களான 27 வயதான தர்மா, 24 வயதான பாபு ஆகிய சகோதரர்கள் இருவரும் ஆட்டோ டிரைவரான சங்கர் வீட்டுக்கு […]