விளையாட்டு

தனது ஓய்விற்கான காரணத்தை வெளியிட்ட பிரபல தென்ஆப்பிரிக்க வீரர்

  • December 9, 2023
  • 0 Comments

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் நீங்கா இடம் பெற்றவர்களில் ஏபி டி வில்லியர்ஸ் ஒருவர் என்றால் மிகையாகாது. 2004-ல் தனது 20 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். விக்கெட் கீப்பர், அதிரடி பேட்ஸ்மேன் என முத்திரை பதித்து 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் மூன்று வருடங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடினார். டி வில்லியர்ஸ் 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில விளையாடி 20,014 ரன்கள் […]

இலங்கை

இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கொரொனா அச்சுறுத்தல் காலத்தில் ஆசிரியர்களிடமிருந்து ஓரு நாள் சம்பளத்தை மீளப்பெறல் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் மீண்டும் அதிபர்கள் ஆசிரியர்களிடம் 17 கல்வி வலயங்களுக்கும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை பெறாதவர்கள் பெற்றுக்கொள்ளுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார். ம்ட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை […]

இலங்கை

ஹட்டனில் பள்ளிவாசல் ஒன்றில் திருட்டு சம்பவம் – காவலாளி அடித்து கொலை

  • December 9, 2023
  • 0 Comments

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது இன்று (09) அதிகாலை நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் அவர் பலியாகியுள்ளார். அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது. ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும் ஹட்டன், ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த சி.எம். இப்ராஹிம் ( 67) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.அவரின் தலைப்பகுதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. “அதிகாலை ஒரு மணியளவில் சுவர் ஏறி குதித்து பள்ளிவாசலுக்கு வந்த நபரொருவர், காவலாளியின் ஓய்வறைக்கு சென்றுள்ளார். பின்னர் வெளியே […]

ஐரோப்பா

இத்தாலியில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து : நான்கு பேர் உயிரிழப்பு

  • December 9, 2023
  • 0 Comments

இத்தாலி தலைநகர் ரோம் அருகே டிவொலி பகுதியில் மருத்துவமனையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையின் மேல்தளத்தில் தீ வேகமாக பரவியதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினரால் மருத்துவமனையில் சிக்கித்தவித்த நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர்.ஆனாலும் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு சிலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

இலங்கை

இலங்கை முழுவதும் திடீர் மின்சார தடை: இலங்கை மின்சார சபை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கை  நாடு முழுவதும் இன்று(09) மாலை திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது. திடீர் மின் தடை காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை நிவர்த்தி செய்ய இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில் தற்போது பல பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த இலங்கை மின்சார சபை, ஏனைய அனைத்துப் […]

மத்திய கிழக்கு

பாலஸ்தீனிய ஆண்களை அரை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் முடக்கிய இஸ்ரேல் – ஹமாஸ் கடும் கண்டனம்

  • December 9, 2023
  • 0 Comments

இஸ்ரேலிய படைகளால் பாலஸ்தீனிய ஆண்கள்அரை நிர்வாணமாக நடுத்தெருவில் முடக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, அதற்கு எதிராக ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான மோதலில் இருதரப்பினரும் போர்க் குற்றங்களில் ஈடுபடுவதாக பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தனர். தற்போது கைதான பாலஸ்தீனியர்களை கண்ணியமற்ற வகையில் நடத்துவதாக இஸ்ரேல் படைகள் மீது ஹமாஸ் குற்றம்சாட்டி உள்ளது. காசா வீதிகளில் உள்ளாடைகள் மட்டுமே அணிந்த பாலஸ்தீனிய ஆண்கள் அமர்ந்துள்ள புகைப்படங்கள் வெளியானதை அடுத்து, இஸ்ரேலுக்கு எதிராக […]

உலகம்

வரவு செலவுத் திட்ட நெருக்கடி : ஜெர்மன் அதிபர் வெளியிட்ட நம்பிக்கை

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை சரிசெய்வதற்கு கூட்டணிக் கட்சிகளுடன் கடுமையான பேச்சுவார்த்தைகள் இறுதியில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் என்று ஜெர்மன் அதிபர் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். “இது மிகவும் கடினமான பணியாகும்,” என்று கட்சி பிரதிநிதிகளிடம் நடந்துகொண்டிருக்கும் வரவு செலவுத் திட்டப் பேச்சுக்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். “ஆனால் நாம் வெற்றியடைவோம் என்ற நம்பிக்கையை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். மேலும் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமான வகையில் வெற்றி பெறுவோம்” […]

உலகம்

செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்கான ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள்

செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான உலகின் முதல் விரிவான சட்டங்கள் குறித்த தற்காலிக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் எட்டியுள்ளனர். 36 மணிநேர பேச்சுகளுக்குப் பிறகு, ChatGPT மற்றும் முக அங்கீகாரம் போன்ற அமைப்புகளில் AI தொடர்பான விதிகளை பேச்சுவார்த்தையாளர்கள் ஒப்புக்கொண்டனர். ஐரோப்பிய பாராளுமன்றம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் AI சட்ட முன்மொழிவுகளில் வாக்களிக்கும், ஆனால் எந்தவொரு சட்டமும் குறைந்தது 2025 வரை நடைமுறைக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. “AI சட்டம் உலகளவில் முதன்மையானது. AI இன் வளர்ச்சிக்கான […]

ஐரோப்பா

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) அடுத்த ஆண்டு விளையாட்டுகளில் நடுநிலையாளர்களாக ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது, பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெறும் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள், உக்ரைன் போரை தீவிரமாக ஆதரிக்காத வரை, அணி நிகழ்வுகளுக்கு வெளியே, கொடிகள், சின்னங்கள் அல்லது கீதங்கள் இல்லாமல் பங்கேற்க முடியும் என்று ஐஓசி தெரிவித்துள்ளது. . உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் ஆரம்பத்தில் சர்வதேச அளவில் போட்டியிட […]

இலங்கை

தல்பேயில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் விசாரணை

ஹபராதுவ, தல்பே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். தங்களை பொலிஸார் என்று அடையாளப்படுத்தி கொண்ட குழுவொன்று குறித்த நபரை மாத்தறையில் இருந்து காலி – தல்பே வரை கடத்தி சென்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பின்னர் குறித்த குழுவினர் அந்த நபர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 30 வயதான நபர் தற்போது கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான மேலதிக […]