மத்திய கிழக்கு

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் – பிரதமர் நெதன்யாகு

  • December 10, 2023
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 2 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காஸாவில் இதுவரை 17,700 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போரால், காஸாவில் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டன. இதன் ஒருபகுதியாக […]

ஆசியா

பன்றி இறைச்சி விரும்பி சாப்பிட்டு வந்த நபர்… தலைவலியுடன் மருத்துவரை நாடிய போது காத்திருந்த அதிர்ச்சி!

  • December 10, 2023
  • 0 Comments

சீனாவில் பன்றி இறைச்சி விரும்பி சாப்பிடும் நபர் ஒருவர் தலைவலி மற்றும் வலிப்பு நோய் பாதிப்புடன் மருத்துவரை நாடிய நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த நபரின் மூளை உட்பட உடம்பில் இருந்து 700 நாடாப்புழுக்களை மருத்துவர்களை அகற்றியுள்ளனர். கிழக்கு சீனாவின் Hangzhou பகுதியை சேர்ந்த 43 வயது Zhu Zhong-fa என்பவர் ஒரு மாத காலமாக நோய்வாய்ப்பட்டு அவதியடைந்து வந்துள்ளார். இதனையடுத்து Zhejiang பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர்களின் சிகிச்சையை நாடியுள்ளார். மருத்துவர் Wang […]

இலங்கை

இலங்கையில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் அதிக மழையுடனான வானிலையுடன் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம், பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, உடபலாத்த மற்றும் மெததும்பர ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குருநாகல் மாவட்டத்தின் மாவத்கம மற்றும் பொல்கஹவெல, மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல அம்பன்கங்க கோரலே மற்றும் லக்கல […]

உலகம்

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நர்கஸ் முகமதி: அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற குழந்தைகள்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரானிய ஆர்வலர் நர்கஸ் முகமதியின் குழந்தைகள் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை அவர் சார்பாக ஏற்றுக்கொண்டனர். ஒஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு சிறையில் அடைக்கப்பட்ட ஈரானிய ஆர்வலர் நர்கஸ் முகமதிக்கு வழங்கப்பட்டது, பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிவதையும், ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுவதையும் கடுமையாக எதிர்த்த முகமதி, சிறையில் இருந்த போதிலும் அவரது பல தசாப்தங்களாக செயல்பாட்டிற்காக அக்டோபரில் 2023 அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒஸ்லோ சிட்டி ஹாலில் 13:00 மணிக்கு […]

இலங்கை

இலங்கை – கம்பஹா பகுதியில் 175 இலட்சம் பெறுமதியான தங்க பொருட்கள் கொள்ளை!

  • December 10, 2023
  • 0 Comments

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் உள்ள அடமான நிலையமொன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரிய ஆயுதங்களுடன் வந்த இருவரே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை 8.20 மணியளவில் மையத்தை திறக்கும் போது உள்ளே நுழைந்த இருவரால் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 175 இலட்சம் பெறுமதியான தங்கப் பொருட்களையும் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக அடகுக் கடையின் உரிமையாளர்கள் […]

பொழுதுபோக்கு

மானத்தை வாங்கிய சனம் ஷெட்டி.. கமல் தான் கெஞ்சினாரா?

  • December 10, 2023
  • 0 Comments

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சனம் ஷெட்டி விமர்சித்து வரும் நிலையில், தொடர்ந்து கமல்ஹாசனின் ஹோஸ்ட் சரியில்லை என்றும் விமர்சித்து வருகிறார். இதனால், கடுப்பான மக்கள் நீதி மய்யம் தொண்டர் போட்ட ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி, மக்கள் நீதி மய்யத்தையும் அதன் தலைவர் கமல்ஹாசனையும் டோட்டல் டேமேஜ் செய்துள்ளார். பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சனம் ஷெட்டியை ரசிகர்கள் மக்கள் நாயகி என கொண்டாடினர். கடைசி வரை பிக் பாஸ் […]

உலகம்

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 90 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. கடந்த அக்டோபா் 7-ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அதனையடுத்து அக்டோபர் 13, 15 மற்றும் […]

இலங்கை

இலங்கையில் பதுளை நோக்கி செல்லும் அஞ்சல் ரயில் இரத்து!

  • December 10, 2023
  • 0 Comments

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இரவு நேர அஞ்சல் ரயிலை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. நிலச்சரிவு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பாதையில் ரயில் சேவை தடைபட்டதை அடுத்து ரயில்வே திணைக்களம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்படி கெலிஓயாவுக்கும் கம்பளைக்கும் இடையில் இரண்டு இடங்களிலும் தெமோதர மற்றும் ஹாலியாலக்கு இடையிலும் புகையிரத பாதையில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்து கத்தார் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • December 10, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மீண்டும் போர் நிறுத்தத்தை அறிவிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக கத்தார் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை அறிவிக்கும் மத்தியஸ்தராக கட்டார் செயற்பட்டதையடுத்து 07 நாட்கள் தற்காலிக யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. எனினும், போர் நிறுத்தத்துக்குப் பிறகு, காசா பகுதியில் மீண்டும் கடுமையான மோதல்கள் வெடித்தன. எனினும், போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யும் என கத்தார் தெரிவித்துள்ளது.

இலங்கை

கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவ,மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு

திருகோணமலை -கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவ,மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு (09) பாடசாலை பெற்றோர்களினால் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை பரதநாட்டிய போட்டி தேசியமட்டம் 18.11.2023 அன்று அனுராதபுரம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது . அதில் திருகோணமலை கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயம் – தப்பு நடனம் -கிராமிய குழு நடனத்தில் இரண்டாம் இடத்தினை பெற்று வெற்றி பெற்றுள்ளது . இப்பாடசாலையானது தேசிய மட்டம் வரை சென்றது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த […]