May 3, 2025
Follow Us
பொழுதுபோக்கு

இங்க இவ்வளோ வேல இருக்கு… ஆனால் ஆண்டவர் பறந்தார் அமெரிக்காவுக்கு

  • January 31, 2024
  • 0 Comments

விக்ரம் படத்திற்கு பிறகு கமலின் படங்கள் வெளியாகாத நிலையில், இந்த வருடம் இந்தியன் 2 படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அடுத்தாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தங் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது. எப்போதுமே கமலின் படங்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு படத்திற்கும் அபரிவிதமான வித்தியாசம் இருக்கும். சினிமாவுக்காக எதையும் செய்ய கமல் தயங்க மாட்டார். அதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்கள் […]

வட அமெரிக்கா

நான்காவது முறையாகவும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்

  • January 31, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரை குடியரசுக் கட்சி எம்பி கிளாடியா டென்னி முன்மொழிந்தார்.இந்த சிறப்பு விருதுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரைக்கப்படுவது இது நான்காவது முறையாகும். மத்திய கிழக்கில் கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் டிரம்ப் முக்கியப் பங்காற்றியதாக டென்னி தெரிவித்தார். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மத்திய கிழக்கில் கூடுதல் சமாதான உடன்படிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று பல […]

உலகம்

சீன உளவாளி என சந்தேகத்தின் அடிப்படையில் பந்தயப் புறாவை 8 மாதம் சிறையில் வைத்திருந்த மும்பை பொலிஸார்!

  • January 31, 2024
  • 0 Comments

சீன தேசத்து உளவாளி என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மும்பை போலீஸாரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த புறா ஒன்று 8 மாத ‘சிறைவாச’த்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. பகை தேசங்கள் மத்தியில் உளவு பார்ப்பதற்கு என செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் வந்துவிட்டன. இந்த உளவு சாதனங்களை ஒருங்கிணைக்கும் செயற்கை நுண்ணறிவு மூலம் அபரிமிதமான உளவுத் தகவல்களை பெற முடியும். இந்த நவீன அறிவியல் முன்னேற்றங்கள் இல்லாத காலத்தில் தகவல் தொடர்புக்கும், அதன் வழியே உளவு தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் பறவைகளை, குறிப்பாக புறாக்களை நாடுகள் […]

ஐரோப்பா

புட்டினுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிடும் போரிஸ் நடேஷ்டின்

ரஷ்யாவின் அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட போதுமான கையெழுத்துகளை சேகரித்ததாக கிரெம்ளின் போட்டியாளர் போரிஸ் நடேஷ்டின் தெரிவித்துள்ளார்.. தேவையான 100,000 கையெழுத்துக்களை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக நடேஷ்டின் தெரிவித்துள்ளார்.. அவரது விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட கையொப்பங்களில் ஏதேனும் “முறைகேடுகள்” கண்டறியப்பட்டால், கமிஷன் வேட்பாளரை முழுவதுமாக தகுதி நீக்கம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கெஹலிய கோ விலேஜ் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது!

  • January 31, 2024
  • 0 Comments

கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி ‘கெஹலிய கோ விலேஜ்’ என்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இம்யூனோகுளோபுலின் மருந்து தொடர்பான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, குறித்த மருந்து தொடர்பான வழக்கு தொடர்பில் இரண்டாவது தடவையாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூலங்களைப் பெறுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக […]

ஐரோப்பா

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா தாக்கல்

  • January 31, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பிரான்ஸில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகள் நிலைநாட்டப்படும் என இனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உறுதி அளித்தார். இதன்படி பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேறியது. இதன்பிறகு இந்த மசோதா செனட் சபைக்கு அனுப்பப்படும். அங்கு பெரும்பான்மை பெற்றால் இது சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை

தெற்கிலே ஒரு சட்டம் வடக்கிலே ஒரு சட்டம் என்றால் வடக்கு கிழக்கினை தனிநாடாக அறிவிக்க வேண்டும் – கோவிந்தன் கருணாகரம் கேள்வி

  • January 31, 2024
  • 0 Comments

தெற்கிலே ஒரு சட்டம் வடக்கிலே ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்றால் ஏன் இந்த நாடு ஒன்றுபட்டதாக இருக்கவேண்டும்.வடக்கு கிழக்கினை பிரித்து தனிநாடாக வழங்கவேண்டியதுதானே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பியுள்ளார். ஒரே நாட்டுக்குள் ஒரே சட்டத்தினை பேணிப்பாதுகாக்கமுடியாவிட்டால் ஒரே நாடு தேவையில்லை என்ற நிலைமைக்கு எங்களை தள்ளிவிடுகின்றீர்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு தை மாதம் 28ஆம் திகதி […]

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 115 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு : நிதியை கையாள்வது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

  • January 31, 2024
  • 0 Comments

2024 வருடத்திற்குரிய வரவு செலவுத்திட்டத்தினூடாக முறையான கிராமிய அபிவிருத்தி மூலம் பிரதேச ஏற்றத் தாழ்வுகளை குறைத்து நாட்டின் நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டதுடன் வலுவான கிராமிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலமாக பாரிய பொருளாதார இலக்கினை அடைந்து தேசிய பணிக்கு பங்களிப்பு செய்தல் எனும் நோக்கில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 115 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரிகளை தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச […]

இலங்கை

பாடசாலை மாணவரொருவர் உயிரிழப்பு : பொலிஸார் தீவிர விசாரணை

ஹட்டன் லெதண்டி பகுதியில் 15 வயது பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவர் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹட்டன் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசியா

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் பகுதியில் உள்ள சிறையைத் தகர்க்க தீவிரவாதிகள் முயற்சி…15 பேர் சுட்டுக்கொலை!

  • January 31, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் சிறையைத் தகர்க்கும் முயற்சியாக, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உட்பட 15 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தென்கிழக்கு மாகாணங்களில் ஒன்றான பலூசிஸ்தான் பகுதியில் மாக் என்ற இடத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த 29 மற்றும் 30ம் திகதிகளில் இந்த சிறைச்சாலையை தகர்க்கும் முயற்சியாக, துப்பாக்கிகள், சிறிய ரக ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் கொண்டு தொடர் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. தீவிரவாதிகள் நடத்திய […]