ஐரோப்பா செய்தி

ரஷ்யாவுடனான எல்லைப்பகுதியில் வேலி அமைக்கும் பின்லாந்து!

  • April 13, 2023
  • 0 Comments

ரஷ்யாவுடனான தனது எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையை பின்லாந்து ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சுமார் 200 கிலோமீற்றர் நீளமான வேலி அமைக்கப்படவுள்ளதாக பின்லாந்து தெரிவித்துள்ளது. 3 மீற்றர் (10 அடி) உயரமுடையதாக இந்த வேலி இருக்கும். வேலியின் மேற்பகுதியில் முட்கம்பிகள் பொருத்தப்படும் என பின்லாந்து எல்லைக் காவல் படை தெரிவித்துள்ளது. ரஷ்யாவுடன் 1,340 கிலோமீற்றர் நீளமான எல்லையை பின்லாந்து பகிர்ந்துகொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில், ரஷ்யாவுடன் மிக நீளமான எல்லையைக் கொண்டுள்ள நாடு பின்லாந்து. […]

ஐரோப்பா செய்தி

நேட்டோவில் இணைவதற்கு பின்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்!

  • April 13, 2023
  • 0 Comments

நேட்டோவில் இணைவதற்கான பின்லாந்தின் முயற்சிக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 200 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 184 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். உக்ரைன் படையெடுப்பை தொடர்ந்து எல்லைகளை பாதுகாத்துக் கொள்ள பின்லாந்து கடந்த ஆண்டு மே மாதம் விண்ணபித்தது. ஹங்கேரிய ஜனாதிபதி கட்டலின் நோவக், பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் நேட்டோ உள்ளீடுகளை கூடிய விரைவில் அங்கீகரிக்க நேட்டோவிற்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் ஹங்கேரி மற்றும் துருக்கியால் பின்லாந்தின் முயற்சி பின்னடைவை சந்தித்தது. நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் […]

ஐரோப்பா செய்தி

ஜேர்மனியின் விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம்

  • April 13, 2023
  • 0 Comments

ஜேர்மனியில் விசா வழங்கும் நடைமுறையை மாத்திரமன்றி, ஒட்டுமொத்த சட்டத்தையும் புதுப்பிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஜேர்மனி சான்ஸலர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் மிகப்பாரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாடாகத் திகழும் ஜேர்மனி விசா வழங்கும் செயன்முறையை விரைவுபடுத்த விரும்புகின்றது. அதுமாத்திரமன்றி வெளிநாட்டுத்தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கும் தீர்மானித்துள்ளது. ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோர் முகங்கொடுக்கும் முக்கிய தடைகளை நீக்கவேண்டும் என்பதே இப்புதிய சட்டத்தின் நோக்கமாகும். இதில் கல்விசார் அடைவுகளை அங்கீகரிப்பது குறித்த சிக்கலான செயன்முறையும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஐரோப்பா செய்தி

ஜி20 கூட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனாவை புறக்கணிக்கும் பிரதிநிதிகள்!

  • April 13, 2023
  • 0 Comments

இந்தியாவின் ஜி20 கூட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனாவை தவிர்க்க பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர். ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னாலெனா பேர்பாக், ஜி20 கூட்டத்தில் ரஷ்ய பிரச்சாரத்தை எதிர்கொள்வுள்ளதாக கூறப்படுகிறது. ஜி20 கூட்டத்தொடர் நாளை இந்தியாவின் புதுடெல்லியில் ஆரம்பமாகவுள்ளது. இதில் உக்ரைன் போர் குறித்து முக்கியமாக கரிசனை கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே இந்த சந்திப்பின் போது சீனா மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகளை சந்திக்க வாய்ப்பில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். இதனையடுத்து மேற்படி கருத்து வெளியாகியுள்ளது.

ஐரோப்பா செய்தி

கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் – வைரல் புகைப்படம்

  • April 13, 2023
  • 0 Comments

கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் மனித முகம் போன்று தோன்றிய நிலையில் அதை ஒரு புகைப்பட கலைஞர் தனது கேமராவில் புகைப்படமாக எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட் (41). இவர் கொரோனா ஊரங்கு காலத்தில் ஏற்பட்ட மன அழுத்ததில் இருந்து வெளிவர புகைப்பட கலைஞராக மாறினார். பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை நிகழ்வுகளை புகப்படங்களாக எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், இயன் ஸ்பரொட் கடந்த […]

ஐரோப்பா செய்தி

இராணுவ பயிற்சியாளர் போல் வேடமிட்டு உக்ரைனில் நுழைந்த ரஷ்ய உளவாளி கைது!

  • April 13, 2023
  • 0 Comments

உக்ரைனின் இராணுவ பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உக்ரைனின் இராணுவ பயிற்சியாளராக வேடமிட்டு வந்த ரஷ்யாவை சேர்ந்த  உளவாளியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தெற்கு உக்ரைனில் உள்ள மைக்கோலாய்வில், உளவு தகவல்களை சேகரித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில். அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. உக்ரைனின் பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துவது, ஏவுகணை தாக்குதல்களை குறிவைக்கும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கொண்ட தளங்களின் இருப்பிடங்கள் பற்றிய உளவு தகவல்களை அவர் ரஷ்யாவிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. உளவாளியின் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

  • April 13, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் 11 போர் விமானங்களை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே இரவில் ரஷ்யாவால் ஏவப்பட்ட 14 போர் விமானங்களில், 9 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்தார். குறித்த போர் விமானங்கள் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ட்ரோன் நடவடிக்கையின் பற்றாக்குறை ஆயுத இருப்பு குறைந்துள்ளதை சுட்டிக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவில் வெளிநாட்டு வார்த்தைகள் பயன்படுத்த தடை! புடின் விடுத்துள்ள உத்தரவு

  • April 13, 2023
  • 0 Comments

ரஷ்ய அரசு அதிகாரிகள் வெளிநாட்டு வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது வெளிநாட்டு வார்த்தைகள் மற்றும் முகபாவனைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.திருத்தப்பட்ட சட்டத்தின்படி, அதிகாரிகள் ரஷ்ய மொழியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இதற்கான உத்தரவில் அதிபர் விளாடிமிர் புடின் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார். ரஷ்ய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள வாசகத்தின்படி, 2005 சட்டத்தின் திருத்தங்கள் ரஷ்யாவின் நிலையைப் பாதுகாப்பதற்காகவும் ஆதரிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.ரஷ்ய கூட்டமைப்பின் மாநில மொழியாக ரஷ்ய மொழியைப் பயன்படுத்தும் […]

சூட்கேசில் மனித மாமிசத்துடன் சிக்கிய இளைஞன்: விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்

  • April 13, 2023
  • 0 Comments

போலி ஆவணங்களுடன் பயணிப்பதாக சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்தார்கள் போர்ச்சுகல் பொலிஸார். ஆனால், விசாரணையில் அவரைக் குறித்த அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திங்கட்கிழமையன்று, போர்ச்சுகல்லின் லிஸ்பன் விமான நிலையத்தில், ஃபெர்னாண்டஸ் (25) என்பவரது ஆவணங்கள் சந்தேகத்துக்குரியவையாக இருந்ததால் அவரைக் கைது செய்து காவலில் அடைத்தார்கள் பொலிஸார்.அத்துடன் அவரது சட்டையில் இரத்தக்கரை இருக்கவே, அவரது சூட்கேசை சோதனையிட்டபோது, பெரிய பெரிய பார்சல்களில் ஏதோ மாமிசம் இருப்பது தெரியவந்தது. அவை மனித மாமிசமாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அதிகாரிகள் […]

ஐரோப்பா செய்தி

நித்தியானந்தா தொடர்பில் ஐ.நாவில் கைலாசா பெண் பிரதிநிதி கவலை !

  • April 13, 2023
  • 0 Comments

ஐ.நா. சபைக் கூட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் ‘கைலாசா பிரதிநிதிகள் கலந்துகொண்டமை உலகின்  கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் நித்தியானந்தா மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதனையடுத்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா மத்திய ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு அதற்கான கொடியையும் வெளியிட்டார். அந்த நாடு குறித்து www.kailaasa.org என்ற இணையதளத்தில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. […]

You cannot copy content of this page

Skip to content