ஐரோப்பா

பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி பெண் படுகொலை

பிரான்ஸில்  இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Argenteuil (Val-dOise) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீடொன்றில் இருந்து காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு 25 வயதுடைய பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இக்கொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர் கொல்லப்பட்ட பெண்ணின் துணைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

 

(Visited 3 times, 1 visits today)
See also  சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : மூவர் படுகாயம்!
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content