உலகம்

உலகின் மிகப் பெரிய செல்வந்தரின் அடுத்த வாரிசு யார்? 5 பிள்ளைகளின் நிலை என்ன

உலகின் மிகப் பெரிய செல்வந்தரான பெர்னார்ட் ஆர்னால்ட் LVMH நிறுவனத்தை வழி நடத்த 5 பிள்ளைகளில் யாரைத் தெரிவுசெய்வார் என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் Louis Vuitton, Christian Dior எனப் பல்வேறு சொகுசுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யும் LVMH நிறுவனத்தின் மதிப்பு 480 பில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது.

அதன் உரிமையாளரான ஆர்னால்டிற்கு 74 வயது. அவரின் 5 பிள்ளைகளும் சிறு வயதிலிருந்து வர்த்தகத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள்.

தற்போது LVMH நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளனர். ஒரு மகள் 4 மகன்கள் உள்ளனர்.

48 வயது மகளான டெல்ஃபின் ஆர்னால்ட் ஜனவரி மாதம் Christian Dior நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். 45 வயது மகன் அன்ட்டோயின் ஆர்னால்ட்  LVMH கீழ் இயங்கும் ஒரு முக்கியமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகும்.

மற்ற 3 மகன்களும் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கின்றனர். இவர்களில் யார் LVMH நிறுவனத்தை வழி நடத்துவார்? அது திறனுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் முடிவுசெய்யப்படும் என ஆர்னால்ட் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content