செய்தி

இலங்கையில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

இலங்கையில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய சிக்கல்கள் இன்றி சிகிச்சைகளை முன்னெடுத்துச்செல்ல முடியும் என அவர் கூறினார்.

இதனிடையே, மருந்து பற்றாக்குறை தொடர்பில் பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளிடம் வினவியுள்ளது.

அத்துடன், நோயாளர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாத வகையில் அந்த நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி